தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக நேற்று அன்புமணி அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைப்பதை உறுதி செய்திருந்தார். ஏற்கனவே பாமக அப்பா மற்றும் மகன் இடையேயான மோகதலால் யார் பக்கம் இருக்கிறது என்று தெரியாமல் தொண்டர்கள் குழம்பி இருக்கும் சூழலில் நேற்று அன்புமணி கூட்டணியை உறுதி செய்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் பாமக நிறுவனர் மற்றும் தலைவரான டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பாமகவுக்கு மருத்துவர் ஐயா மட்டுமே நிறுவன தலைவராக இருந்து கட்சியை வழிநடத்தி வருகின்றார். 2025 டிசம்பர் 17ஆம் தேதி முதல் மருத்துவர் அய்யாவே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயற்குழு மற்றும் பொதுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியுடன் தேர்தல் கூட்டணி என்று அன்புமணியுடன் அல்லது வேறு எவரிடமும் எந்த அரசியல் கட்சியும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த முடியாது.
மருத்துவர் அய்யா மட்டுமே செயற்குழு மற்றும் பொதுக்குழுவால் தேர்தல் கூட்டணி பேசும் அதிகாரம் பெற்றவர். எனவே அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தேர்தல் கூட்டணி பேசியதாக செய்தி வெளியாகி உள்ள நிலையில் அந்த தகவல் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். அப்படி ஒரு கூட்டணி பேச்சு நடந்திருந்தால் அது சட்டவிரோதம். கட்சி விதிமுறையின்படி மருத்துவர் ஐயா மட்டுமே யாருடனும் கூட்டணி பேச உரிமை உடையவர் என்று ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இது தமிழக அரசியலில் பரபரப்பு கிளப்பியுள்ளது.
விசிகவைச் சேர்ந்த பனையூர் பாபு கட்சியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, கட்சியின் முக்கிய முகமும் நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான…
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே அதிகாலையில் 17 வயது சிறுவன் குபேந்திரன் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட…
ஐபிஎல் 2026 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றமளிக்கும் வகையில் செயல்பட்டு, புள்ளிப் பட்டியலில்…
காட்டில் சுற்றுலாப் பயணிகள் 'ஜங்கிள் சபாரி' சென்று கொண்டிருந்த போது, சிங்கத்திற்கும் சிறுத்தைக்கும் இடையே ஏற்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் மற்றும்…
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தின் கோலா பகுதியில், கோடை விடுமுறைக்காகத் தங்கள் பாட்டி வீட்டிற்கு வந்த அண்ணன், தங்கை…
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாரதிபுரம் கிராமத்தில், கடந்த மே 22ஆம் தேதி மாலை கடைக்குச் சென்ற 10…