Connect with us

CINEMA

தன்னுடன் நடித்த மூத்த நடிகருக்கு மரியாதை செய்யும் விதமாக 1 கோடி ருபாய் சம்பளம் கொடுக்க சொன்ன ரஜினி… வெளியான சுவாரசிய தகவல்…

நடிகர் சிவாஜி கணேசன் இவரை ‘கலைத்தாயின் மூத்த பிள்ளை’ என்று கூறுவார்கள். இவரது நடிப்புக்கு இலக்கணமாக வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், மகாகவி பாரதியார், சுபாஷ் சந்திரபோஸ் என பல படங்களை கூறிக் கொண்டே செல்லலாம். தமிழ் சினிமாவில் 1952ம் ஆண்டு வெளியான பராசக்தி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான்  சிவாஜி கணேசன்.

   

இவர் இதுவரை 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளதோடு 9 தெலுங்கு திரைப்படங்கள், 2 ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் 1 மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி நடிப்பின் எல்லா பரிணாமங்களையும் கடந்த சிவாஜி கணேசன் அடுத்த தலைமுறை நடிகர்களுடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி அதிலும் செஞ்சுரி அடித்தார்.

ஒரு கட்டத்தில் காலகட்டத்தில் இனிமேல் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கவேண்டுமென முடிவு செய்தாராம் சிவாஜி.  அப்படி குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கியபின், தயாரிப்பாளர்களிடம் சம்பளம் குறித்து எதுவுமே பேசமாட்டாராம் சிவாஜி. தன்னை படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்கும் தயாரிப்பாளர்களிடம், இந்த கதாபாத்திரத்திற்கு எவ்வளவு தரவேண்டும் என நினைக்கிறாயோ, அதை மட்டும் கொடு போதும் என கூறிவிடுவாராம்.

அப்படி அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து  நடித்த படம் தான் படையப்பா. இப்படத்தில் ரஜினியின் தந்தை கதாபாத்திரத்தில் சிவாஜி நடித்திருப்பார். மக்கள் மனதில் இருந்து இன்று வரை நீங்கா இடத்தை இவருடைய கதாபாத்திரம் பிடித்துள்ளது. இத்திரைப்படத்திற்காக அவருக்கு ரூ. 1 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் வரை லட்சங்களில் சம்பளம் வாங்கிய அவரால் இதை நம்ப முடியாமல் , தயாரிப்பு தரப்பினரிடம் போன் செய்து கேட்ட போது , ‘ரஜினிகாந்த் சார் தான் உங்களுக்கு ரூ. 1 கோடி சம்பளம் கொடுக்க சொன்னார்’ என கூறினார்களாம். இதற்காக ரஜினிகாந்திற்கு சிவாஜி கணேசன் நன்றி தெரிவித்து கடிதம் எழுதினாராம். அன்றைய கால கட்டத்தில் ரஜினி  சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், தன்னை விட மூத்த கலைஞரை எப்படி மதிக்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்துள்ளார்.

Continue Reading

More in CINEMA

To Top