Connect with us

CINEMA

பல பெண்களுடன் தொடர்பு? தனுஷை நேரடியாக வம்பிழுக்கும் பிரபல தயாரிப்பாளர்! இவ்வளவு கோபமா?

கடந்த 2022 ஆம் ஆண்டு தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. மேலும் அந்த சமயத்தில் பல ஊடகங்களில் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோரின் பிரிவை குறித்த பேச்சுக்களாக இருந்தன.

   

அதனை தொடர்ந்து சமீபத்தில் இருவரும் விவாகரத்து வாங்கப்போவதாக அறிவிப்பு வெளிவந்தது. ஆதலால் சமீப நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் மீண்டும் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்த பேச்சுக்கள் வலம் வருகின்றன.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது தனுஷை குறித்து மிகவும் கடுமையான பல கருத்துகளை முன் வைத்தார்.

“தனுஷ், உனக்கு பல பெண்களுடன் அப்படி என்ன வாழ்க்கை? ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் தமிழ் பண்பாடு. நான் நேரடியாக எதுவும் பேசக்கூடாது என்று நினைத்தேன். ஆனால் மனசு வரவில்லை. நீதிமன்றம் வரைக்கும் போனபிறகு என்ன நாகரீகமாக பேசுவது? தயவுசெய்து தமிழ் பண்பாட்டை காப்பாற்றவேண்டும் என்று நினைத்தால் தமிழர்களுக்கு பிறந்தவர்களாக இருந்தால் மக்களின் சாபத்தை பெறக்கூடாது என்று நினைத்தால் இருவரும் சேர்ந்து வாழுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களை வாழ்த்தி வாழுங்கள்” என்று மிகவும் உக்கிரமாக பேசியுள்ளார். இவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

author avatar
Continue Reading

More in CINEMA

To Top