சின்னத்திரை நடிகை வைஷ்ணவி சுந்தர் தொலைக்காட்சி சீரியல்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி இரண்டாவது சீசனில் வைஷ்ணவி வேலைக்காரியாக நடித்து அசத்தினார்.

விஜய் டிவியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். முன்னதாக டிக் டாக் மற்றும் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் வைஷூ பிரபலமானார். முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான ரன் சீரியல் மூலம் திரையுலகில் என்ட்ரி கொடுத்தார்.

சில குறும்படங்களிலும் வைஷு சுந்தர் நடித்துள்ளார். தற்போது பொன்னி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் வைஷு சுந்தர் நடிக்கிறார். பெங்காலியில் ஒளிபரப்பான காட்சோரா என்ற சீரியல் தமிழில் பொன்னி என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.

இதில் வைஷு சுந்தர் கதாநாயகியாக நடிக்கிறார். சபரிநாதன் கதாநாயகனாக நடிக்கிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் வைஷு அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது மார்டன் உடையில் வைஷு வெளியிட்ட புகைப்படங்கள் வேகமாக பரவி வருகிறது.

