இதனிடையே யாரடி நீ மோகினி மற்றும் திருவிளையாடல் ஆரம்பமாகிய திரைப்படங்களில் தனுஷை பார்த்தது போல அச்சு பிசறாமல் அப்படியே மற்றொரு ஜெராக்ஸ் ஆக வந்துள்ள நடிகர் தான் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே திரைப்படம் மூலமாக திரையுலகில் நடிகராக அறிமுகமான பிரதிப் ரங்கநாதன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். கதையைத் தாண்டி தன்னுடைய நடிப்பை பாராட்ட வைக்கும் அளவுக்கு பிரதீப் ரங்கநாதன் மொத்த உடலையும் நடிக்க வைத்திருப்பது தான் படம் பிரம்மாண்ட வெற்றி அடைய முக்கிய காரணம் என்கின்றனர். இவர் இறுதியாக டிராகன் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை விட வசூலில் 10 மடங்கு அதிகமாக நான்கு நாட்களில் டிராகன் திரைப்படம் வசூலித்துள்ளது. முதல் மூன்று நாட்களில் டிராகன் திரைப்படம் 50 கோடி வசூலை கடந்து மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து விட்டதாக அர்ச்சனா கல்பாத்தி பதிவிட்டுள்ளார். நேற்றைய தினம் படத்தின் வசூல் நன்றாகவே இருந்த நிலையில் இந்திய அளவில் 5.5 கோடி ரூபாய் வசூலை டிராகன் திரைப்படம் நான்காவது நாளில் வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை மொத்தமாக இந்திய அளவில் 36 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில் உலக அளவில் 56 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் நேற்று வெறும் 46 லட்சம் மட்டுமே வசூல் செய்த நிலையில் இதுவரை இந்திய அளவில் இந்த திரைப்படம் ஐந்து கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் 5 கோடி ரூபாய் வசூலையும் டிராகன் திரைப்படம் 56 கோடி ரூபாய் வசூலையும் ஈட்டி உள்ள நிலையில் 10 மடங்கு அதிக வசூலை பிரதீப் ரங்கநாதன் திரைப்படம் அல்லி தனுஷ் திரைப்படத்தை பாக்ஸ் ஆபீஸில் ரொம்பவே வீக் ஆகி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ட்ரோல்கள் குவிந்து வருகின்றன. இதன் மூலமாக டிராகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அடுத்த வாரத்திற்குள் 100 கோடி ரூபாய் போஸ்டரை வெளியிடுவது உறுதி எனவும் கூறுகின்றனர்.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…