பிரபல நடிகரும் நடன கலைஞருமான பிரபு தேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபுதேவாவின் ரசிகர்கள் மற்றும் பல்வேறு திரைப்படங்கள் என பலரும் பங்கேற்று இருந்தனர். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அனைவராலும் கொண்டாடப்படும் பிரபு தேவா நடன இயக்கம், நடிப்பு மற்றும் இயக்கம் என்று பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். இவர் இதுவரை தன்னுடைய நடன நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்க்க நேரடியாக எங்கும் நடத்தியது கிடையாது. இப்படி ஒரு நடன நிகழ்ச்சியை நடத்துவது இதுதான் முதல் முறை.
அருண் ஈவென்ட்ஸ் நிறுவனம் ஒருங்கிணைத்த பிரபுதேவாவின் இந்த லைவ் நடன நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 100 நடன கலைஞர்களின் மத்தியில் “ஊர்வசி ஊர்வசி” பாடலுடன் பிரபுதேவா அரங்கம் அதிர நடன நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடன இயக்குனர் சாண்டி, நடிகர்கள் பரத், சாந்தனு, நாகேந்திர பிரசாத், நடிகைகள் ராய் லட்சுமி மற்றும் ரித்திகா சிங் உள்ளிட்டோர் பிரபுதேவா உடன் இணைந்து நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் பாக்கியராஜ், வடிவேலு மற்றும் தனுஷ் உள்ளிட்ட நடிகர்களும் ரம்பா மற்றும் மீனா உள்ளிட்ட நடிகைகளும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பிரபுதேவாவின் காதலன் திரைப்படத்தில் இடம்பெற்ற ” பேட்ட ராப்” பாடலுக்கு நடனமாடி கொண்டிருந்த பிரபுதேவா மேடைக்கு கீழ் அமர்ந்து கொண்டு இருந்த நடிகர் வடிவேலு அருகில் வந்து பல சேட்டைகளை செய்தார். வடிவேலும் பதிலுக்கு முக பாவனைகளை மாற்றி பாடலுடன் சேர்ந்து சேட்டை செய்தார்.
தொடர்ந்து பாடலுக்கு நடனமாடியபடியே வடிவேலுவின் தலைமுடியை கலைத்துப் போட்டார் பிரபுதேவா. இருவருடைய செயல்களையும் பார்த்த ரசிகர்கள் கத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 1994 ஆம் ஆண்டு வெளியான காதலன் திரைப்படத்தின் பேட்ட ராப் பாடலில் பிரபுதேவா மற்றும் வடிவேலு இருவருடைய காம்போவும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…