சிவகங்கை மாவட்டத்தில், பத்ரகாளியம்மன் கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்த நதியா என்ற பெண்ணின் நகைகள், காரில் வைத்திருந்த போது காணாமல் போனது. அதைப் பற்றி கிடைத்த புகாரின் பெயரில், அங்கு பணியாற்றி வந்த காவலாளி அஜித்குமார், குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சி.பி.ஐ அதிகாரிகள், கண்ணன், ஆனந்த், பிரபு, சங்கர் மணிகண்டன், ராஜா என ஐந்து போலீஸார்கள் கைது செய்யப்பட்டு, 2 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்தினர்.
அப்பொழுது அவர்களிடம் அஜித் குமாரை கொடூரமாக தாக்க உத்தரவிட்டது யார்? அவர் விசாரணைக்காக எங்கு அழைத்துச் செல்லப்பட்டார்? அப்போது என்ன நடந்தது? என சரமாரியாக சி.பி.ஐ அதிகாரிகள் போலீசாரை விசாரித்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவல்களை வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.
கடந்த 25 நாட்களாக நடைபெற்று வரும் சி.பி.ஐ விசாரணையில் அஜித்குமாரை கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டதுக்கான ஆதாரங்களும், பிரேத பரிசோதனையில் அவரது உடலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கலும் இருந்ததாக தெரியவந்தது. மிளகாய் பொடியை பயன்படுத்தி, அவரை சித்திரவதை செய்துள்ள நிலையில், மிளகாய் பொடி.. எங்கு? எப்போது வாங்கப்பட்டது? என்று விசாரித்தனர். இதில் அக்கோயிலுக்கு அருகில் உள்ள மளிகை கடையில் அஜித்குமாரின் நண்பர் ஒருவர், காவல்துறையினர் கூறியதாக சொல்லி மிளகாய் பொடியை வாங்கிக் கொடுத்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…