பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் கட்சியின் விதிகளுக்கு புறம்பாக நடந்ததாக அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக அன்புமணி விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில் அன்புமணி பதிலளிக்காததால் அவரை கட் செய்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார். அன்புமணியை செயல் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் ராமதாஸ் அறிவித்தார்.
இந்நிலையில் கட்சியின் புதிய செயல் தலைவராக தன்னுடைய மூத்த மகள் காந்திமதியை நியமிப்பதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். தர்மபுரியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், என்னுடைய மகள் ஸ்ரீகாந்தி கட்சிக்கும் எனக்கும் பாதுகாப்பாக இருப்பார். செயல் தலைவர் என்ற பொறுப்பை உருவாக்கினேன். அதனை ஒருவர் வேண்டாம் என்று கூறிவிட்டார். எனவே என்னுடைய பெரிய மகளுக்கு அந்தப் பதவியை வழங்குகிறேன் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். அன்புமணி மற்றும் ராமதாஸ் மோதல் முற்றியுள்ள சூழலில் மகளுக்கு தற்போது பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது பாமகவில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…
சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…
நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…
மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…