கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே விஜய மாநகரம் பகுதியில் வசித்து வரும் ராஜவேல் (60) என்பவருடைய மகள் ராதிகா (35). இவர் விருதாச்சலம் அருகே உள்ள வீரா ரெட்டி குப்பம் கிராமத்தில் உள்ள ஒரு மழலையர் தொடக்கப்பள்ளியில் கடந்த 13 வருடங்களாக ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இதனிடையே கடந்த 19ஆம் தேதி வீட்டில் திடீரென்று ராதிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அந்த விசாரணையில் ராதிகா பணியாற்றி வந்த தனியார் பள்ளியின் தாளாளர் மகனான பிரின்ஸ் நவீன் என்பவரும் ராதிகாவும் கடந்த 10 வருடங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து உள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் நபியின் ராதிகாவை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரின்ஸ் நவீன் ராதிகாவை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ராதிகா தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது. ராதிகா பணியாற்றிய தனியார் பள்ளி தாளாளர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கருணை இல்லம் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தான் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
இவருடைய மகனும் இதே போல பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகளிடம் பாலியல் சீண்டரில் ஈடுபட்டதும் வறுமையில் உள்ள ஆசிரியைகளை ஆசை வார்த்தை கூறி சீரழித்து வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…
தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை…
நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் ( கில் இடையிலானMI) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல்…