பள்ளிக்கு அழைத்துச் சென்ற காரில் கொடூரம்… 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர்… சக மாணவியால் வெளிவந்த பகீர் உண்மை…!!

Spread the love

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த 52 வயதுடைய ஆமோஸ் தேவசகாயம், கடந்த பிப்ரவரி 22 அன்று தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க மாணவிகளை அழைத்துச் சென்றுள்ளார். போட்டிகள் முடிந்த பிறகு, மற்ற மாணவிகள் பேருந்தில் செல்ல, பாதிக்கப்பட்ட 15 வயது 10-ஆம் வகுப்பு மாணவியையும் அவரது தோழியையும் தனது காரில் அழைத்து வந்துள்ளார். அப்போது, காரின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த மாணவியிடம் ஆசிரியர் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதோடு, இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டி இருவரையும் பள்ளி வளாகத்தில் இறக்கிவிட்டுள்ளார்.

காரின் பின்பக்க இருக்கையில் அமர்ந்து இந்த சம்பவத்தைக் கவனித்த மாணவியின் தோழி அச்சமடைந்து, சில நாட்களுக்குப் பிறகு இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராமபிரியா புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆசிரியர் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதியானதைத் தொடர்ந்து, உடற்கல்வி ஆசிரியர் ஆமோஸ் தேவசகாயம் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி மாணவியிடம் உடற்கல்வி ஆசிரியரே இத்தகைய அத்துமீறலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள இந்தச் சம்பவம், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

4 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

4 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

5 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

5 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

5 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

5 மணத்தியாலங்கள் ago