திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, கார்த்திகை மாதத்தில் மலையில் விளக்கு ஏற்றுவது பண்டைய கால இந்து பாரம்பரியம். இன்று இந்தியாவில் உள்ள இந்துக்கள் தங்கள் நம்பிக்கை மற்றும் மரபுகளை பின்பற்ற நீதிமன்றங்களை நாட வேண்டியிருப்பது துரதிஷ்டவசமானது. ஒரு தீர்க்கமான சட்ட போராட்டத்தில் வெற்றி பெற்ற பிறகும் பக்தர்கள் தங்கள் சொந்த செலவில் ஒரு சிறிய அமைதியான சடங்கை கூட செய்ய முடியாவிட்டால் இந்த நாட்டில் அவர்களுக்கு அரசியல் அமைப்பு நீதி எங்கே கிடைக்கும்?
உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். எந்த மத விழாவையும் ஒரு வாரம் தாமதமாக கொண்டாட முடியுமா? ஒரு புனித நாள் நாளை கொண்டாடுவதை வேறொரு நேரத்துக்கு மாற்ற முடியுமா? ஆனால் இந்த புனிதமான கார்த்திகை தீபம் தருணம் திருடப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் கோயில்களையும் மத விவகாரங்களையும் நிர்வகிக்க சனாதன தர்ம ரக்சா வாரியம் நமக்கு தேவை. இந்து மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை கேலி செய்வது சில குழுக்களுக்கு வழக்கமாகி விட்டது. மற்ற மத நிகழ்வுகளின் விஷயங்களிலும் அவர்களால் இதை செய்யத் துணிய முடியுமா?
இந்துக்கள் ஜாதி பிராந்தியம் மற்றும் மொழித் தடைகளால் பிரிக்கப்பட்டு இருக்கும் வரை இந்து மதமும் அதன் நடைமுறைகளும் தொடர்ந்து கேலி செய்யப்பட்டு அவமதிக்கப்பட்டு கொண்டே இருக்கும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காமாக்யா முதல் துவாரகா வரை ஒவ்வொரு இந்துவும் தங்கள் சொந்த மண்ணில் இந்துக்கள் எதிர்கொள்ளும் அவமானங்கள் குறித்து விழித்துக் கொள்ளும் நாள் வரும் என்று நம்புகிறேன், என்று அந்த பதிவில் பவன் கல்யாண் கூறியிருக்கிறார்.
தபால் நிலையத்தின் 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம், முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க உதவும் ஒரு சிறந்த சேமிப்புத்…
புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் காலியாக உள்ள 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' பணியிடத்திற்குத்…
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குழந்தைகளை வெப்பத்திலிருந்து காக்க பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்து மருத்துவர்கள்…
தற்கால டிஜிட்டல் உலகில் நீண்ட நேரம் அலைபேசி மற்றும் மடிக்கணினிகளைத் குனிந்து பார்ப்பதால் ஏற்படும் கழுத்து வலி, சாதாரணமான ஒன்றாகத்…
ஜோதிட சாஸ்திரப்படி வரும் மே 6, 2026 அன்று, புளூட்டோ கிரகம் (யமன்) தனது பாதையில் பின்னோக்கி நகரும் வக்ர…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…