நடிகர் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படமான ‘பராசக்தி’, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. சுதா கொங்கரா இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷின் 100-வது படமாக உருவாகும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் வேண்டுகோளை ஏற்று, இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிரடியாக மாற்றியுள்ளது. அதன்படி, திட்டமிட்ட தேதியை விட நான்கு நாட்களுக்கு முன்பாகவே, அதாவது ஜனவரி 10-ம் தேதியன்றே ‘பராசக்தி’ உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
1960-களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்தைப் பின்னணியாகக் கொண்ட இத்திரைப்படத்தில், சிவகார்த்திகேயனுடன் அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் ரவி மோகன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு அடுத்த நாளே சிவகார்த்திகேயனின் படம் வெளியாவது பாக்ஸ் ஆபீஸில் பெரும் போட்டியை உருவாக்கியுள்ளது. இந்த பொங்கல் விடுமுறை சினிமா ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் – விஜய் என இரண்டு பெரிய நட்சத்திரங்களின் மோதலுடன் இரட்டை விருந்தாக அமையப்போகிறது.
சென்னை நீலாங்கரையில் உள்ள பிரபல நடிகர் ரவி மோகனின் வீட்டைச் சுற்றி தற்போது ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. அவரது…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அபிஷேகம், சண்முகார்ச்சனை, தங்கத்தேர் உலா உள்ளிட்ட முக்கியக் கட்டண சேவைகளின் விலையை பெருமளவில் உயர்த்த…
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையின் நியூ பன்வெல் பகுதியில், சொந்த வீட்டிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நரக வேதனையை…
கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது மகனைப் பெற்ற தாயும் அவரது கள்ளக்காதலனும் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம்…
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முன்னெப்போதும் இல்லாத வகையில்…
தமிழ் ஊடக உலகில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த மூத்த பத்திரிகையாளரும், பல இளம் ஊடகவியலாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் ஆசானாகவும்…