விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்…! பொங்கலுக்கு முன்னாடியே வரும் ‘பராசக்தி’… ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழு….! பின்னணி என்ன?

By Devi Ramu on மார்கழி 22, 2025

Spread the love

நடிகர் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படமான ‘பராசக்தி’, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. சுதா கொங்கரா இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷின் 100-வது படமாக உருவாகும் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் வேண்டுகோளை ஏற்று, இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிரடியாக மாற்றியுள்ளது. அதன்படி, திட்டமிட்ட தேதியை விட நான்கு நாட்களுக்கு முன்பாகவே, அதாவது ஜனவரி 10-ம் தேதியன்றே ‘பராசக்தி’ உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

   

1960-களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டக் களத்தைப் பின்னணியாகக் கொண்ட இத்திரைப்படத்தில், சிவகார்த்திகேயனுடன் அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் ரவி மோகன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

   

நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு அடுத்த நாளே சிவகார்த்திகேயனின் படம் வெளியாவது பாக்ஸ் ஆபீஸில் பெரும் போட்டியை உருவாக்கியுள்ளது. இந்த பொங்கல் விடுமுறை சினிமா ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் – விஜய் என இரண்டு பெரிய நட்சத்திரங்களின் மோதலுடன் இரட்டை விருந்தாக அமையப்போகிறது.