“அரண்மனை நாயே.. வாயை அடக்கு”…. அண்ணா அறிவாலயத்தில் வெடித்த பரந்தாமன்…. நிர்மல்குமாருக்கு விழுந்த நெத்தியடிப் பதில்…!

Spread the love

தமிழக அரசியல் களம் தற்போது ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான கடுமையான வார்த்தை மோதல்களால் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் விமர்சனங்களுக்கு மிகக் கடுமையான மொழியில் பதிலடி கொடுத்துள்ளார். தவெக எம்எல்ஏ-க்களை இழுக்க திமுக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசியிருந்த அமைச்சர் நிர்மல்குமார், தவெக எம்எல்ஏ-க்களைத் தொடர்புகொண்டு ரூ.50 கோடி வரை பேரம் பேசுவதாகவும், கடந்த 40 நாட்களாக தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சிகள் நடப்பதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதியின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கைகள் நடப்பதாகக் கூறிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்குச் செய்த கெடுதல்களுக்காக மன்னிப்பு கேட்டுவிட்டு, மு.க.ஸ்டாலின் அரசியலை விட்டு ஒதுங்க வேண்டும் என்றும் மிகக் காட்டமாக விமர்சித்திருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பரந்தாமன், “பாஜக, அதிமுக, அமமுக என ஒவ்வொரு கட்சியாக மாறி மாறி ஓடி வந்து, கடைசியில் தவெக-வில் தஞ்சம் புகுந்த நிர்மல்குமாருக்கு, எங்கள் தலைவரைப் பார்த்து அரசியலை விட்டு ஒதுங்குமாறு சொல்வதற்குத் துளியும் அருகதை இல்லை” என்று சாடினார். ஒரே கட்சியில் நீடித்து இருக்கும் தகுதி இல்லாதவர்கள் அரசியல் புரிதல் பற்றிப் பேசக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். வைகோவின் பேச்சைச் சுட்டிக்காட்டிய அவர், உண்மையில் விஜய் தரப்புதான் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து நிர்மல்குமாரை எச்சரித்த பரந்தாமன், “மக்களால் கொடுக்கப்பட்ட ஆட்சியில் நல்ல நிர்வாகத்தைச் செய்து, திட்டங்களைக் கொடுத்துப் பெயரை நிலைநாட்டுவதை விட்டுவிட்டு, திமுக மீது தொடர்ந்து தவறான செய்திகளைப் பரப்புவீர்கள் என்றால், எங்களுக்கு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் திரைக்கதை வசனம்தான் ஞாபகத்திற்கு வருகிறது. ‘அரண்மனை நாயே.. அடக்குடா வாயை’ என்ற வசனத்தின் மூலமே இதற்கு நாங்கள் பதிலளிக்க விரும்புகிறோம்” என்று மிகக் கடுமையான எச்சரிக்கையுடன் தனது பேட்டியை நிறைவு செய்தார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

அறிவாலயத்தை உலுக்கிய அந்த ஒரு போன் கால்… திமுக சீனியர்கள் திடீர் அதிர்ச்சி…. ஸ்டாலினுக்கு செந்தில் பாலாஜி கொடுத்த புதிய தலைவலி…. வெளியான பகீர் தகவல்..!

தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் நடத்தப்பட்ட ரூ.35 கோடி குதிரை…

3 minutes ago

திமுகவை கதறவிட்ட விஜய்… சல்லி சல்லியாய் உடைந்த கூட்டணி… பின்னணியில் நடந்த அந்த ரகசிய பிளான்… தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அதிரடி திருப்பம்…!

தமிழக அரசியல் களம் எப்போதும் திமுக, அதிமுக என்ற இரு துருவங்களை மையமாகக்கொண்டே சுழன்று வந்துள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,…

8 minutes ago

“ஆட்டோ சவாரியில் நடந்த ஏமாற்றம்…? பயணி கொடுத்த ரூ50 நோட்டை பார்த்து ஓட்டுநர் செய்த அதிரடி காரியம்…! மிரண்டு போன நெட்டிசென்கள்…!!”

நாக்பூரைச் சேர்ந்த ராஜேந்திர தெம்ரே என்ற ஆட்டோ ஓட்டுநர், தமக்குத் தற்செயலாகக் கிடைத்த கூடுதல் பணத்தைக் கொண்டு செய்த நற்செயல்…

10 minutes ago

இனி ஹாஸ்பிடல் ஓட தேவையில்லை… தலைவலி, வறட்டு இருமல் முதல் வாய்வுத் தொல்லை வரை… எல்லாத்துக்கும் ‘நோ’ மாத்திரை…! இதோ உங்க கிட்சன் ரகசியம்..!”

சளி, இருமல், செரிமானக் கோளாறு போன்ற அன்றாட உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடியாக மருந்துக்கடைகளுக்கும் மருத்துவமனைக்கும் ஓடுவதைத் தவிர்த்து, நம் வீட்டு…

12 minutes ago

“ரூ. 35 கோடி பேரம்.. குடும்பத்தோடு காலி பண்ணிடுவோம்”…. எம்எல்ஏ இளையராஜா வழக்கில் திடீர் திருப்பம்…. நள்ளிரவில் வெளியான அந்த ‘எப்ஐஆர்’ ரகசியம்..!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினர் இளையராஜாவுக்கு கொலை மிரட்டல்…

14 minutes ago

திடீர் திருப்பம்…. அதிமுக MLA-க்கள் ராஜினாமா… பின்னணியில் தவெக? போட்டுடைத்த CPM…. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள…

19 minutes ago