“தலைகீழான தமிழக அரசியல்”… முதல்வர் விஜய்யை சந்திக்க மாட்டேன்… மேயர் பிரியா ஓப்பன் டாக்…. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி காரணம்….!

Spread the love

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகள் முற்றிலும் ஸ்தம்பித்துப் போயுள்ளன. வழமையாக ஒவ்வொரு மாதத்தின் இறுதி வாரத்திலும் சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் கூட்டம் நடைபெறவில்லை. தற்போது தேர்தல் முடிந்து மே மாதமும் நிறைவடையும் நிலைக்கு வந்துவிட்ட போதிலும், இந்த மாதத்திற்கான மாமன்றக் கூட்டமும் கூட்டப்படாமல் தள்ளிப்போயிருப்பது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து, அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்பு வரை திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), இடதுசாரிகள், ஐயுஎம்எல் உள்ளிட்ட முக்கியக் கட்சிகள், இந்தத் தேர்தலில் தவெகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அதுமட்டுமன்றி, புதிய அரசில் விசிக, ஐயுஎம்எல், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆட்சி அதிகாரத்திலும் பங்கெடுத்துள்ளன. தங்களின் கூட்டணிக் கட்சிகள் இப்படி தவெக பக்கம் சாய்ந்து ஆட்சியைப் பிடித்திருப்பது திமுக தரப்பில் கடும் அதிருப்தியையும் அரசியல் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், சென்னை மாநகராட்சியில் உள்ளாட்சிப் பணிகள் அனைத்தும் பெரிய அளவில் முடக்கமடைந்து தேங்கிக் கிடக்கின்றன. மாமன்றக் கூட்டம் கூட்டப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டால் மட்டுமே புதிய திட்டங்களும் வார்டு பணிகளும் வேகம் பெறும். சென்னையில் கணிசமான அளவில் திமுக கவுன்சிலர்களே தற்போதும் பதவியில் நீடிப்பதால், புதிய அரசுடன் இணக்கமான சூழல் ஏற்படுமா? மாநகராட்சி கூட்டம் எப்போது நடக்கும்? என்ற கேள்விகள் பரவலாக எழுந்தன.

இந்நிலையில், இன்று ரிப்பன் மாளிகையில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்திருந்த சென்னை மேயர் பிரியாவிடம் செய்தியாளர்கள் இதுகுறித்துக் கேள்வி எழுப்பினர். அதற்கு மிகவும் ஓபனாக பதிலளித்த மேயர் பிரியா, “தற்போது புதிய அரசு பொறுப்பேற்று செயலாற்றி வருகிறது. எனவே, மே மாதத்திற்கான சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை” என்று கூறினார். மேலும், தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்திப்பீர்களா என்கிற கேள்விக்கு, “தமிழக முதல்வரை இப்போதைக்கு சந்திக்கும் வாய்ப்பு ஏதுமில்லை” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். மேயரின் இந்த அதிரடிப் பதில் தமிழக அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.

Nanthini

Recent Posts

“நான் அவரை கொன்னுட்டேன்… என்னை அரெஸ்ட் பண்ணுங்க…” போதையில் தூங்கிய நபர்… விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சேட்ராஜ் மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ராமலிங்கம் இடையே நிலம் தொடர்பாக நீண்டநாட்களாகப்…

12 minutes ago

“போதைப்பொருள் வைச்சுருக்கிய…” மாணவர்கள் மீது பொய் வழக்கு… “உங்க வாழ்க்கையையே அழிச்சிருவேன்…” மிரட்டிய மும்பை போலீஸ்… இணையத்தை உலுக்கும் பகீர் வீடியோ…!

மும்பையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது, கைதான மாணவர்களைப் பொய் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டிய காவலர் மீது…

17 minutes ago

“யார்கிட்டயும் சொல்லக்கூடாது பாப்பா…” 20 ரூபாய் கொடுத்து மாணவியை மிரட்டிய நடத்துனர்…. தாயிடம் சொல்லி அழுத மகள்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி, தினமும் அரசு பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.…

24 minutes ago

“ஏமாத்துரத்துக்கும் ஒரு அளவு வேண்டாமா?…” 2 கிலோ தங்கம்… 10 அடுக்குமாடி குடியிருப்பு… சந்தை மதிப்பு ரூ.150 கோடியா?… ஆனா சாதாரண எஞ்சினியர்… லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை…!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக் கழகத்தில் பணியாற்றி வரும் எஞ்சினியர் முத்யம் வெங்கட ரமணா, வருமானத்திற்கு…

25 minutes ago

இது என்னடா புதுசா இருக்கு… “180% அதிக மழை…” இமயமலையைக் தாண்டி… 10,000 கி.மீ மேகப்படை… ஆசிய கண்டத்தையே சூழும் பேராபத்து?… மிரள வைக்கும் சாட்டிலைட் போட்டோ…!

நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை தாமதமாகத் தொடங்கி, சில வாரங்களிலேயே மந்தமடைந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் கவலையடைந்திருந்தனர். இருப்பினும்,…

35 minutes ago

ரயில்வே எக்ஸாம்க்கு படிக்கிறீங்களா…? 1.61 லட்சம் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்… மத்திய அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!

ரயில்வே தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் எந்தவித வினாத்தாள் கசிவோ அல்லது முறைகேடுகளோ நிகழவில்லை என்றும், சுமார் 1.61…

36 minutes ago