ரயில்வே தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் எந்தவித வினாத்தாள் கசிவோ அல்லது முறைகேடுகளோ நிகழவில்லை என்றும், சுமார் 1.61 லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், 2014 முதல் 2026 வரையிலான காலத்தில் 5.56 லட்சம் பேருக்குப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, தான் கேட்காத கேள்விக்கும் சேர்த்துப் பதிலளித்துள்ள ரயில்வே அமைச்சர், தேர்வு முகமை மற்றும் கல்வித்துறையை மறைமுகமாக விமர்சித்துள்ளதாக எம்பி சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், 2024 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வருடாந்திர தேர்வு அட்டவணையின்படி, குரூப்-சி உள்ளிட்ட கெசட்டட் அல்லாத பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் வெளிப்படையான முறையில் வேகமாக நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் லோனாவாலா அருகே பெய்து வரும் கனமழைக்கு இடையே மலைப் பகுதியில் உலா வந்த இளைஞர் ஒருவர், எதிர்பாராதவிதமாகத்…
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சேட்ராஜ் மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ராமலிங்கம் இடையே நிலம் தொடர்பாக நீண்டநாட்களாகப்…
மும்பையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது, கைதான மாணவர்களைப் பொய் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டிய காவலர் மீது…
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி, தினமும் அரசு பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.…
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக் கழகத்தில் பணியாற்றி வரும் எஞ்சினியர் முத்யம் வெங்கட ரமணா, வருமானத்திற்கு…
நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை தாமதமாகத் தொடங்கி, சில வாரங்களிலேயே மந்தமடைந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் கவலையடைந்திருந்தனர். இருப்பினும்,…