“ஏமாத்துரத்துக்கும் ஒரு அளவு வேண்டாமா?…” 2 கிலோ தங்கம்… 10 அடுக்குமாடி குடியிருப்பு… சந்தை மதிப்பு ரூ.150 கோடியா?… ஆனா சாதாரண எஞ்சினியர்… லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை…!

Spread the love

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக் கழகத்தில் பணியாற்றி வரும் எஞ்சினியர் முத்யம் வெங்கட ரமணா, வருமானத்திற்கு அதிகமாகப் பெருமளவில் சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்குக் ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், அவரது வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள், கூட்டாளிகள், பினாமிகளுடன் தொடர்புடைய 7 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் ரூ.1.23 கோடி மதிப்பிலான 4 குடியிருப்பு அடுக்குமாடி வீடுகள், ரூ.1.82 கோடி மதிப்பிலான வணிகக் கட்டிடம் மற்றும் ரூ.2.90 கோடி மதிப்பிலான மற்றொரு வணிகக் கட்டிடம் எனப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள அசையாச் சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அசையாச் சொத்துகள் மட்டுமன்றி, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில், ரூ.52.02 லட்சம் வங்கி வைப்புத் தொகை, ரூ.4 கோடி மதிப்புள்ள 2.094 கிலோ தங்க ஆபரணங்கள், ரூ.45 லட்சம் மதிப்பிலான 3 வாகனங்கள், ரூ.30 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 20 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ரமணா தனது மனைவியின் பெயரில் 4 கட்டுமான நிறுவனங்களை நடத்தி, அஞ்சநேய நகர் மற்றும் மூசாபேட் பகுதிகளில் ரூ.20 கோடி முதலீட்டில் 10 குடியிருப்பு வளாகங்களைக் கட்டி வருவதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி கணக்கிடப்பட்ட சொத்துகளின் மதிப்பைக் காட்டிலும், தற்போதைய சந்தை நிலவரப்படி இதன் உண்மையான மதிப்பு சுமார் ரூ.100 முதல் ரூ.150 கோடி வரை இருக்கும் என ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கணித்துள்ளனர். ஏற்கனவே கடந்த 2019-ஆம் ஆண்டிலும் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் மீது, தற்போது மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரசு அதிகாரியின் இந்த அசாத்திய சொத்துக் குவிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Visaka

Recent Posts

முதல்வருக்கு ஜனநாயகன் தானே முக்கியம்….! அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்…. மக்களின் நிலையை கண்டு கொதித்த எடப்பாடி பழனிச்சாமி…!!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரலை எலி கடித்த சம்பவம்…

31 seconds ago

லோனாவாலாவில் நடுக்கம்…! பள்ளத்தாக்கில் விழுந்து மர கிளையில் சிக்கிய இளைஞர்….! வைரலாகும் திக் திக் வீடியோ…!!

மகாராஷ்டிர மாநிலம் லோனாவாலா அருகே பெய்து வரும் கனமழைக்கு இடையே மலைப் பகுதியில் உலா வந்த இளைஞர் ஒருவர், எதிர்பாராதவிதமாகத்…

21 minutes ago

“நான் அவரை கொன்னுட்டேன்… என்னை அரெஸ்ட் பண்ணுங்க…” போதையில் தூங்கிய நபர்… விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சேட்ராஜ் மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ராமலிங்கம் இடையே நிலம் தொடர்பாக நீண்டநாட்களாகப்…

58 minutes ago

“போதைப்பொருள் வைச்சுருக்கிய…” மாணவர்கள் மீது பொய் வழக்கு… “உங்க வாழ்க்கையையே அழிச்சிருவேன்…” மிரட்டிய மும்பை போலீஸ்… இணையத்தை உலுக்கும் பகீர் வீடியோ…!

மும்பையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது, கைதான மாணவர்களைப் பொய் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டிய காவலர் மீது…

1 மணத்தியாலம் ago

“யார்கிட்டயும் சொல்லக்கூடாது பாப்பா…” 20 ரூபாய் கொடுத்து மாணவியை மிரட்டிய நடத்துனர்…. தாயிடம் சொல்லி அழுத மகள்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி, தினமும் அரசு பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.…

1 மணத்தியாலம் ago

இது என்னடா புதுசா இருக்கு… “180% அதிக மழை…” இமயமலையைக் தாண்டி… 10,000 கி.மீ மேகப்படை… ஆசிய கண்டத்தையே சூழும் பேராபத்து?… மிரள வைக்கும் சாட்டிலைட் போட்டோ…!

நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை தாமதமாகத் தொடங்கி, சில வாரங்களிலேயே மந்தமடைந்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் கவலையடைந்திருந்தனர். இருப்பினும்,…

1 மணத்தியாலம் ago