காலையிலேயே பரபரப்பு…. எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்… ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்….!

Spread the love

தமிழக அரசியல் களம் தற்போது அதிரடி திருப்பங்களுடன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இந்தச் சூழலில், அண்மையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுகவைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது அதிமுகவைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.

இந்த அடுத்தடுத்த அதிரடி மாற்றங்களால் அதிர்ச்சியடைந்துள்ள அதிமுக, தவெக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “தன்னை தூய சக்தி என்று சொல்லிக்கொள்ளும் தவெக, தற்போது துஷ்ட சக்தியாக மாறி குதிரை பேர அரசியல் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளது. பதவி ஆசை காட்டி நம்முடைய ஒருசில நிர்வாகிகளைப் பிரித்து, தவெக இப்போது ஒரு பொய்க்கால் குதிரை அரசை அமைத்துள்ளது” என்று வேதனையுடனும் ஆவேசத்துடனும் சாடியுள்ளார். மேலும், திமுக ஆதரவுடன் தவெக ஆட்சி அமைக்கப் போவதாக பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அவர், தங்கள் கட்சிக்குள்ளேயே தவெக குதிரை பேரத்தை நடத்தியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த கடுமையான விமர்சனத்திற்கு தவெக தரப்பிலிருந்து உடனடியாகவும் அதிரடியாகவும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அமைச்சர் அருண்ராஜ், குதிரை பேரம் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை என்று நேரடியாகச் சாடியுள்ளார். தேர்தல் சமயத்தில் எடப்பாடி தொகுதியில் போட்டியிடவிருந்த தவெக வேட்பாளர் எப்படி திடீரென தனது மனுவை வாபஸ் பெற்றார் என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், எடப்பாடி பழனிசாமிதான் பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து குதிரை பேரத்தின் மூலம் அந்த வேட்புமனுவை வாபஸ் வாங்க வைத்தார் என்று பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும், எடப்பாடி பழனிசாமி மீதான தனது விமர்சனத்தை தீவிரப்படுத்திய அமைச்சர் அருண்ராஜ், திமுகவுடன் கைகோர்த்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக திட்டமிட்டிருந்தார் என்றும், அதற்காக அவரே குதிரை பேரத்தில் ஈடுபட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார். “திமுகவை எதிர்த்துதான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்தார். ஆனால், தற்போதைய தலைமை தங்களின் அரசியல் எதிரியான திமுகவுடன் கைகோர்க்க முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல்தான், கொள்கை பற்றுள்ள அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து வருகின்றனர்” என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த பரஸ்பர குற்றச்சாட்டுகளால் தமிழக அரசியல் களம் தற்போது போர்க்களமாக மாறியுள்ளது.

Nanthini

Recent Posts

“வெயில் தாங்க முடியல… வாட்டர் அடிங்க…” போலீஸிடம் கோரிக்கை வைத்த மாணவர்கள்…! போராட்டக் களத்தில் டான்ஸ் ஆடி… இணையத்தை கலக்கும் சுவாரஸ்ய வீடியோ…!!

பீகார் மாநிலம் பாட்னாவில் நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. கடுமையான…

19 minutes ago

முதல்வருக்கு ஜனநாயகன் தானே முக்கியம்….! அரசு மருத்துவமனையில் தொடரும் அவலம்…. மக்களின் நிலையை கண்டு கொதித்த எடப்பாடி பழனிச்சாமி…!!

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரலை எலி கடித்த சம்பவம்…

31 minutes ago

லோனாவாலாவில் நடுக்கம்…! பள்ளத்தாக்கில் விழுந்து மர கிளையில் சிக்கிய இளைஞர்….! வைரலாகும் திக் திக் வீடியோ…!!

மகாராஷ்டிர மாநிலம் லோனாவாலா அருகே பெய்து வரும் கனமழைக்கு இடையே மலைப் பகுதியில் உலா வந்த இளைஞர் ஒருவர், எதிர்பாராதவிதமாகத்…

52 minutes ago

“நான் அவரை கொன்னுட்டேன்… என்னை அரெஸ்ட் பண்ணுங்க…” போதையில் தூங்கிய நபர்… விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்…!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த சேட்ராஜ் மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ராமலிங்கம் இடையே நிலம் தொடர்பாக நீண்டநாட்களாகப்…

1 மணத்தியாலம் ago

“போதைப்பொருள் வைச்சுருக்கிய…” மாணவர்கள் மீது பொய் வழக்கு… “உங்க வாழ்க்கையையே அழிச்சிருவேன்…” மிரட்டிய மும்பை போலீஸ்… இணையத்தை உலுக்கும் பகீர் வீடியோ…!

மும்பையில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது, கைதான மாணவர்களைப் பொய் போதைப்பொருள் வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டிய காவலர் மீது…

2 மணத்தியாலங்கள் ago

“யார்கிட்டயும் சொல்லக்கூடாது பாப்பா…” 20 ரூபாய் கொடுத்து மாணவியை மிரட்டிய நடத்துனர்…. தாயிடம் சொல்லி அழுத மகள்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி, தினமும் அரசு பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார்.…

2 மணத்தியாலங்கள் ago