#image_title
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும், உணவு, குடிநீர் கிடைக்காமலும் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தன்னார்வலர்களும், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களான கலா மாஸ்டர் , அறந்தாங்கி நிஷா, kpy பாலா போன்றோரும் உதவி செய்த புகைப்படங்களை இணையத்தில் நாம் பார்த்திருப்போம். சமீபத்தில் அறந்தாங்கி நிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் உணவுப்பொருட்களை கொண்டு செல்ல கார் கூட தர மாட்டேங்குறாங்க என்று ஆதங்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து அவர், ‘ தனது மகள் ஸபா டைபாய்டு காய்ச்சலால் ICU- வில் இருப்பதாகவும், குழந்தையை அம்மாவிடம் விட்டு விட்டு வந்துதான் இங்கே உதவி செய்வதாகவும், மேலும் இங்கயும் நிறைய குழந்தைங்க கஷ்டப்படுறாங்க. diaper கூட வாங்க முடியல. அவுங்களுக்கு help பண்ணனும்’ என்றும் கூறிய அவரின் இந்த பேட்டியானது ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் அவரின் இந்த செயலை கமெண்ட் பக்கத்தில் மனதார பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…