ICU-ல் இருக்கும் அறந்தாங்கி நிஷாவின் மகள்.. அதையும் பொருட்படுத்தாமல் சென்னை மக்களுக்கு உதவ வந்துருக்காரே..

By Begam on மார்கழி 10, 2023

Spread the love

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. இடைவிடாது கொட்டிய இந்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கிறது. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமலும், உணவு, குடிநீர் கிடைக்காமலும் தவித்து வருகின்றனர்.

   
மீட்பு பணிகள் நடைபெற்று வந்தாலும், புறநகரிலுள்ள பல்வேறு பகுதிகளில் இன்னும், அரசின் உதவி சென்றடையவில்லை. வெள்ளம் முழுமையாக வடியாததால் பல பகுதிகளுக்கு இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை. சென்னையின் பல இடங்களில் தொலைத் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

   

இந்நிலையில், தன்னார்வலர்களும், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களான கலா மாஸ்டர் , அறந்தாங்கி நிஷா, kpy பாலா போன்றோரும் உதவி செய்த புகைப்படங்களை இணையத்தில் நாம் பார்த்திருப்போம். சமீபத்தில் அறந்தாங்கி நிஷா தனது இன்ஸ்டா பக்கத்தில் உணவுப்பொருட்களை கொண்டு செல்ல கார் கூட தர மாட்டேங்குறாங்க என்று ஆதங்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

 

இதைத்தொடர்ந்து அவர், ‘ தனது மகள் ஸபா டைபாய்டு காய்ச்சலால் ICU- வில் இருப்பதாகவும், குழந்தையை அம்மாவிடம் விட்டு விட்டு வந்துதான் இங்கே உதவி செய்வதாகவும், மேலும் இங்கயும் நிறைய குழந்தைங்க கஷ்டப்படுறாங்க. diaper கூட வாங்க முடியல. அவுங்களுக்கு help பண்ணனும்’ என்றும் கூறிய அவரின் இந்த பேட்டியானது ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் அவரின் இந்த செயலை கமெண்ட் பக்கத்தில் மனதார பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Galatta Media (@galattadotcom)