தமிழகத்தில் திமுகவின் ஆட்சிக்கால முடிவடைவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தங்கள் ஆட்சி முடிவதற்குள் திமுகவின் வாக்குறுதிகளை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். அதனால் மக்கள் அனைவரின் குறைகளை தீர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகின்றது. இதில் மக்கள் பல சேவைகளை ஒரே இடத்தில் பெற முடியும் என அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக விடுபட்டவர்கள் மகளிர் உரிமைத் தொகைக்கு இந்த முகாம் மூலமாக விண்ணப்பித்து வருகிறார்கள்.
இப்படியான நிலையில் திமுக ஆட்சிக்காலத்தில் மட்டும் சுமார் 20 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு 15 நாட்களுக்குள் கார்டு வழங்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் களத்தில் நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட திமுக போன்ற ஒரு பேரியக்கம், விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தைப் போலவே…
கடந்த காலத்தின் நினைவுகள் எப்போதும் ஒருவிதமான ஏக்கம் கலந்த இனிமையை நமக்குத் தருகின்றன. சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் புரட்சி இன்று அரங்கேறியுள்ளது. பல தசாப்தங்களாகத் தி.மு.க-வின்…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் புரட்சியைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிகழ்த்திக்…
"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!" என்ற வசனத்திற்கு முற்றிலும் புதிய அர்த்தம் கொடுக்கும் வகையில், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்…
பஞ்சாப் மாநிலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது நிகழ்ந்த இந்த உருக்கமான சம்பவம், சமூக வலைதளங்களில் பலரது இதயங்களைக் கனக்கச்…