TRENDING
அடேங்கப்பா., நடிகை தேவயானியின் மகள்களா இது.. இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களே.. குடும்பத்துடன் நேர்காணல் கொடுத்த வீடியோ வைரல்..
தமிழ் சினிமாவில் கவர்ச்சி இல்லாமல், தனது நடிப்பு திறமையால் முன்னணி நடிகையானவர், தேவயாணி. இவர் இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் நடிகை தேவயாணி, கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் இணைந்து YouTube சேனலுக்கு பேட்டியளித்த வீடியோ வைரலாகி வருகிறது.
முன்னணி நடிகையான தேவயாணி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் எதார்த்தமான நடிப்பில் உருவான பல படங்கள் வெற்றி படமாக சினிமாத்துறையில் இடம் பெற்றது. இந்த வரிசையில் ‘காதல் கோட்டை’, ‘நினைத்தேன் வந்தாய்’, ‘நீ வருவாய் என’, ‘தெனாளி’, ‘நண்பர்கள்’, ‘ஆனந்தம்’, ‘அழகி’ போன்ற படங்கள் இடம் பெற்றுள்ளது.
30 வருடங்களாக சினிமா துறையில் வலம் வந்த நடிகை தேவயாணி சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்தார். 7 வருடமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதை வென்ற “கோலங்கள்” சீரியலில் அபிநயா கதாபாத்திரத்தில் தேவயாணி நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் சிறந்த நடிகைக்கான “தமிழ்நாடு மாநில விருதை” தேவயானி வென்றார். நடிகை தேவயானிக்கு 2000 ம் ஆண்டு “கலைமாமணி விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
நடிகை தேவயாணி நடிப்பில் வெளியான “அழகி” திரைப்படத்திற்காக விருதையும் வென்றார். தமிழ் சீரியல்களில் ஒரு எபிசோடு நடிப்பதற்கு ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் முதல் சீரியல் கலைஞர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகை தேவயாணி ஜீனி படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போது நடிகை தேவயாணி, இயக்குனர் ராஜ்குமார் மற்றும் இரு மகள்களுடன் இணைந்து YouTube சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், தன் வாழ்வில் நடந்த சினிமாதுறை நிகழ்வுகளை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.