“உடம்பு சரி இல்ல ஐயா… அதனால” பெற்ற மகனையே நரபலி கொடுத்த பெற்றோர்….? பதற வைக்கும் பகீர் சம்பவம்…!!

Spread the love

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பக்னு சோய் – பெலோ சோய் தம்பதி, ஏற்காடு காவேரிபீக் கிராமத்தில் உள்ள கராறா தனியார் தோட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக இரண்டு மகன்களுடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். மூன்றாவது மகனை ஜார்கண்டில் பெற்றோர் வீட்டில் விட்டுள்ளனர்.

நவம்பர் 4-ஆம் தேதி காலை 8:30 மணிக்கு தம்பதி வேலைக்குச் சென்றனர். வீட்டில் இருந்த அவர்களது கடைசி மகன் 4 வயது லபாடா சோய், தோட்டத்தில் தங்கியிருந்த மற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுடன் 300 மீட்டர் தொலைவில் விளையாடினான்.

அப்போது மின் கம்பத்தில் இருந்து அறுந்து கிடந்த மின் கம்பியைத் தொட்டதால் மின்சாரம் தாக்கி சிறுவன்  இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் பெற்றோர் போலீஸுக்கு தகவல் கொடுக்காமல், உடலை வேலை இடத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் குழி தோண்டி ரகசியமாக புதைத்தனர்.

இதுகுறித்து கிராம மக்கள் செம்மநத்தம் கிராம நிர்வாக அலுவலர் வைஷ்ணவிக்கு தகவல் கொடுத்தனர். அவர் ஏற்காடு போலீஸில் புகார் அளித்தார். ஆய்வாளர் வாசுகி, வைஷ்ணவி, வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர்.

தோட்ட மேலாளர் சுனிலிடம் “குழந்தை இறப்புக்கு ஏன் போலீஸுக்கு தகவல் கொடுக்கவில்லை?” எனக் கேட்டபோது, “உடல்நிலை சரியில்லை” என மழுப்பலாக பதிலளித்தார். குழந்தை மரணம் நரபலி என்று ஏற்காட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.

சேலம் அரசு மருத்துவர் கோகுலரமணன் முன்னிலையில் உடலைத் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடல் உறுப்புகள் சில ஆய்வுக்கு எடுக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஏற்காட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

48 minutes ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

51 minutes ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

55 minutes ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

1 மணத்தியாலம் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

2 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

2 மணத்தியாலங்கள் ago