கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கள்ளத்தொடர்பைத் துண்டித்த ஆத்திரத்தில், மூன்று குழந்தைகளின் தாயான பானு (34) என்ற இளம்பெண்ணை அவரது கள்ளக்காதலன் கபீஜ் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சந்திரா லே-அவுட் பகுதியைச் சேர்ந்த அல்தாப் பாஷா என்பவரின் மனைவியான பானுவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான கபீஜுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கபீஜுடனான தொடர்பை பானு துண்டித்து அவரிடமிருந்து விலகி இருக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கபீஜ், நேற்று முன்தினம் பானுவை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தன்னிடம் இருந்த கத்தியால் பானுவைச் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் பலத்த காயமடைந்த பானு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பானு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாக உள்ள கொலையாளி கபீஜைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…