“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

Spread the love

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம் காண்கிறார். இந்நிலையில், அங்கு அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை மிகக் கடுமையாக விமர்சித்தார். “செங்கோட்டையனைப் பற்றி என்னிடம் பல ரகசியங்கள் உள்ளன, அவற்றைச் சின்னத் திரையில் வெளியிட்டால் அவர் வெளியில் தலைகாட்ட முடியாது; மக்கள் காறித் துப்புவார்கள்” என ஒருமையில் விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடியின் இந்த விமர்சனத்திற்குச் செங்கோட்டையன் தரப்பிலிருந்து அனல் பறக்கும் பதிலடி கிடைத்துள்ளது. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி குழம்பிப் போய் பேசுகிறார். சாக்கடையில் கல்லை எறிந்தால் அது நம் மீதுதான் தெறிக்கும்; அதுபோலத்தான் எடப்பாடியின் பேச்சும் உள்ளது. நான் உண்மையான ஆதாரங்களை எடுத்துவிட்டால் அவரால் தாங்க முடியாது. ஜெயலலிதா அவர்களால் 2009-ல் ஓரங்கட்டப்பட்ட எடப்பாடிக்கு, நான்தான் பரிந்துரை செய்து வாரியப் பதவி வாங்கிக் கொடுத்தேன்” என ஆவேசமாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனதற்கே தான் தான் முக்கியக் காரணம் என்ற ரகசியத்தை உடைத்தார். “அன்று என்னுடன் 64 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். நான் மட்டும் முன்மொழியவில்லை என்றால் எடப்பாடியால் ஒருபோதும் முதல்வர் ஆகியிருக்க முடியாது. இப்போது எனக்கு அவர் பதவி கொடுத்ததாகக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. அதிமுகவும் திமுகவும் கைகோர்த்துக்கொண்டு கூட்டுக்கொள்ளையில் ஈடுபடுகின்றன. வரும் தேர்தலில் தவெக-விற்கும் திமுக-விற்கும் தான் நேரடிப் போட்டி; மக்கள் விஜய்யை முதல்வராக்கத் தெளிவாக இருக்கிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நீண்ட கால அரசியல் நண்பர்களாக இருந்த எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் இடையிலான இந்த மோதல் அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “சிதம்பர ரகசியம்” என செங்கோட்டையன் குறிப்பிடும் அந்தத் தகவல்கள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க, ‘துரோகம்’ மற்றும் ‘ரகசியங்கள்’ குறித்த இந்த விவாதம் கோபிசெட்டிபாளையம் தேர்தல் களத்தை ரணகளமாக்கியுள்ளது.

Nanthini

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

23 minutes ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

34 minutes ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

46 minutes ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

1 மணத்தியாலம் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

1 மணத்தியாலம் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

1 மணத்தியாலம் ago