நடிகர் விஜய் மற்றும் சங்கீதாவின் விவாகரத்து மனு விவரங்கள் சமூக வலைதளங்களில் கசிந்தது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வழக்கறிஞர் ஆதித்யா சோழன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள செங்கல்பட்டு முதன்மை நீதிபதி, பொதுவெளியில் கசிந்த அந்த ஆவணத்தில் நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ முத்திரை ஏதும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் அந்த ஆவணங்கள் நீதிமன்றத்திலிருந்து கசியவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட மனுதாரர் தரப்பிலிருந்து (விஜய் அல்லது சங்கீதா) இதுவரை முறையான புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்பதையும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். முறையான புகார் இல்லாத நிலையில், நீதிமன்ற முத்திரை இல்லாத அந்த ஆவணங்கள் சங்கீதா தரப்பிலிருந்தே வெளியாகியிருக்க வாய்ப்புள்ளதாக நீதிபதியின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சங்கீதா தாக்கல் செய்துள்ள இந்த விவாகரத்து மனுவில், குடும்ப நல நீதிமன்றம் விஜய்க்கு ஏப்ரல் 20-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், தான் தங்கியிருக்கும் நீலாங்கரை வீட்டிலேயே தொடர்ந்து வசிக்க அனுமதி கோரி சங்கீதா தரப்பில் புதிய இடைக்கால மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அஜ்மத் உசேன் (41). இவருக்கும் தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும்…
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…
ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…