பெற்ற தாயே தன் ரத்தத்தை இவ்வளவு கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கியுள்ளது. ஹைதராபாத் அருகே உள்ள திண்டிகல் பகுதியில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மம்தா என்ற பெண் கட்டுமானப் பணிக்காகக் குடிபெயர்ந்து தங்கியிருந்தார். இந்நிலையில், பசியால் இடைவிடாது அழுதுகொண்டிருந்த தனது இரண்டு மாத ஆண் குழந்தையை, ஆத்திரத்தில் எரியும் அடுப்பில் வைத்து அந்தப் பெண் எரித்துக் கொன்றுள்ளார். ஈரக்குலையை நடுங்க வைக்கும் இந்தச் செயல் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மம்தாவைக் கைது செய்தனர்.
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாயே, தன் குழந்தையின் அழுகுரலுக்கு உணவளிக்காமல் அவனை நெருப்புக்கு இரையாக்கியது மனிதநேயமற்ற செயலாகப் பார்க்கப்படுகிறது. பசியின் வலியால் அழுத பச்சிளம் பாலகனுக்கு மரணத்தை பரிசாக அளித்த அந்தத் தாயின் செயல், சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஒரு தாயின் கைகளாலேயே ஒரு பிஞ்சு உயிர் கருகியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…