ஓசூர் அருகே கெலமங்கலத்தை அடுத்த சின்னட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான சுரேஷ் என்பவருடைய மனைவி பாரதி (26). சுரேஷ் அந்த பகுதியில் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வரும் நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகின்றது. தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. மேலும் அந்த ஆண் குழந்தையும் சமீபத்தில் தான் பிறந்துள்ளது. ஆனால் பாரதிக்கும் எதிர் வீட்டை சேர்ந்த சுமித்ரா என்ற 20 வயது பெண்ணுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளாக பாலியல் உறவு இருந்துள்ளது. பாரதிக்கு மூன்றாவது குழந்தையான துருவன் பிறந்த பிறகு சுமித்ராவுக்கும் பாரதிக்கும் இடையே ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதில் தொந்தரவு இருந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் சுரேஷ் வீட்டுக்கு வந்த போது குழந்தை மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்துள்ளது. இது குறித்து மனைவியிடம் கேட்டதற்கு பால் கொடுத்து தூங்க வைத்தேன். இருமல் வந்துவிட்டது என்று கூறியுள்ளார். உடனே சுரேஷ் பதறி அடித்துக் கொண்டு குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனே தகவல் அறிந்து விரைந்த போலீசார் சுரேஷிடம் விசாரணை நடத்தியதில் இயற்கையாக தான் குழந்தை இறந்தது என நினைத்து உடற்கூறு ஆய்வு தேவையில்லை என்று போலீசாரிடம் சுரேஷ் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் பெற்றோரிடம் ஒப்படைத்த நிலையில் விவசாய தோட்டத்தில் குழந்தையின் உடல் புதைக்கப்பட்டது.
பிறகு வீட்டுக்கு சென்ற சுரேஷ் பாரதியிடம் மற்றொரு செல்போன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சோதனை செய்தார். அந்த போனில் பாரதியும் சுமித்ராவும் ஓரினச்சேர்க்கையில் இருப்பது போன்ற படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி பாரதியிடம் கேட்டபோது சுமித்ராவும் தானும் உல்லாசமாக இருக்கும் போது அடிக்கடி குழந்தை அழுது தொந்தரவு செய்ததால் குழந்தையை கொன்று விடும்படி சுமித்ரா கூறியதாகவும் அதன் பேரில் குழந்தையை வாயை பொத்தி கொன்று இறந்த உடலை படம் எடுத்து சுமித்ராவுக்கு whatsapp மெசேஜ் அனுப்பி உள்ளதையும் ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் பற்றி சுரேஷ் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாரதி மற்றும் சுமித்ரா இருவரையும் கைது செய்தனர். இந்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைத்துள்ள நிலையில், முதல் ஒரு வாரத்திலேயே பல்வேறு…
தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 வாக்குகளைப் பெற்று தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைமையிலான அரசு வெற்றி…
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சட்டமன்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிலும் வெற்றி…
தமிழக அமைச்சரவையில் சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு கதர் ஆடை அணிந்த இரண்டு காங்கிரஸ் அமைச்சர்கள் இடம்பெறப் போவதாக காங்கிரஸ்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைப் படைத்து, மே 10, 2026 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய், தனது…
தமிழக அரசியலில் அதிமுக உட்கட்சி பூசல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டி தற்போதைய…