நீயெல்லாம் ஒரு பெத்த தாயா?… ஓரினசேர்க்கையில் உல்லாசமாக இருக்கும் போது அழுத 6 மாத குழந்தை… வாயை பொத்தி கொடூரமாக கொன்ற தாய்…!

Spread the love

ஓசூர் அருகே கெலமங்கலத்தை அடுத்த சின்னட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான சுரேஷ் என்பவருடைய மனைவி பாரதி (26). சுரேஷ் அந்த பகுதியில் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வரும் நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகின்றது. தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. மேலும் அந்த ஆண் குழந்தையும் சமீபத்தில் தான் பிறந்துள்ளது. ஆனால் பாரதிக்கும் எதிர் வீட்டை சேர்ந்த சுமித்ரா என்ற 20 வயது பெண்ணுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளாக பாலியல் உறவு இருந்துள்ளது. பாரதிக்கு மூன்றாவது குழந்தையான துருவன் பிறந்த பிறகு சுமித்ராவுக்கும் பாரதிக்கும் இடையே ஓரின சேர்க்கையில் ஈடுபடுவதில் தொந்தரவு இருந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் சுரேஷ் வீட்டுக்கு வந்த போது குழந்தை மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்துள்ளது. இது குறித்து மனைவியிடம் கேட்டதற்கு பால் கொடுத்து தூங்க வைத்தேன். இருமல் வந்துவிட்டது என்று கூறியுள்ளார். உடனே சுரேஷ் பதறி அடித்துக் கொண்டு குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உடனே தகவல் அறிந்து விரைந்த போலீசார் சுரேஷிடம் விசாரணை நடத்தியதில் இயற்கையாக தான் குழந்தை இறந்தது என நினைத்து உடற்கூறு ஆய்வு தேவையில்லை என்று போலீசாரிடம் சுரேஷ் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் பெற்றோரிடம் ஒப்படைத்த நிலையில் விவசாய தோட்டத்தில் குழந்தையின் உடல் புதைக்கப்பட்டது.

பிறகு வீட்டுக்கு சென்ற சுரேஷ் பாரதியிடம் மற்றொரு செல்போன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சோதனை செய்தார். அந்த போனில் பாரதியும் சுமித்ராவும் ஓரினச்சேர்க்கையில் இருப்பது போன்ற படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி பாரதியிடம் கேட்டபோது சுமித்ராவும் தானும் உல்லாசமாக இருக்கும் போது அடிக்கடி குழந்தை அழுது தொந்தரவு செய்ததால் குழந்தையை கொன்று விடும்படி சுமித்ரா கூறியதாகவும் அதன் பேரில் குழந்தையை வாயை பொத்தி கொன்று இறந்த உடலை படம் எடுத்து சுமித்ராவுக்கு whatsapp மெசேஜ் அனுப்பி உள்ளதையும் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் பற்றி சுரேஷ் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாரதி மற்றும் சுமித்ரா இருவரையும் கைது செய்தனர். இந்த விவகாரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

BREAKING: மேலும் 5 MLA-க்கள் ராஜினாமா…! தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!!

அதிமுகவில் மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய…

4 minutes ago

“தவெக அமைச்சரவையில் மாற்றம்”…. ஜூனியர்களுக்கு கல்தா?… விஜய் கையில் எடுத்த ‘ஆபரேஷன் சீனியர்ஸ்’…. பதறவைக்கும் கோட்டை வட்டார ரகசியங்கள்….!

தமிழக அரசியல் களம் தற்போது இடைத்தேர்தல் மோடிற்குள் நுழைந்துள்ள நிலையில், கோட்டை வட்டாரங்களில் அமைச்சரவை மாற்றம் குறித்த விவாதங்கள் அனல்…

14 minutes ago

“வரலாற்றில் முதல்முறை… சிபாரிசு, பணம் இல்லாமல் நடந்த 215 அதிகாரிகள் டிரான்ஸ்பர்”…. தமிழக பத்திரப்பதிவு துறையில் அதிரடி மாற்றம்….!

தமிழக பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவிற்கான ஒரு முக்கிய மைல்கல்லாக, முற்றிலும் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் 215…

22 minutes ago

தவெகவில் இணைந்த 6 முன்னாள் அதிமுக MLA-க்கள்…. இத்தனை கோடி சொத்தா?…. வாயடைத்துப்போன அரசியல் களம்….!

அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள 6 முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் சொத்து விவரங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக…

31 minutes ago

தமிழக பெண்களுக்கு ஷாக் நியூஸ்…. ரேஷன் கார்டில் தவெக அரசு செய்யப்போகும் அதிரடி மாற்றம்… இனி ‘இவர்களுக்கு’ மகளிர் உரிமைத் தொகை கிடையாது….?

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்', தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத்…

42 minutes ago

வேலுமணி, சண்முகத்திற்கே வேட்டு வச்ச இபிஎஸ்… ஆனா ‘அவருக்கு’ மட்டும் ஸ்பெஷல் சலுகை…. அதிமுகவை உலுக்கும் ஒரே ஒரு பெண் எம்.எல்.ஏ…. லீமா ரோஸ் விவகாரத்தின் ‘அக்மார்க்’ அரசியல் ரகசியம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து வரும் வேளையில், அதிமுகவில் உட்கட்சி ஒழுங்கு நடவடிக்கை…

54 minutes ago