சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் தங்கியிருந்த கும்பல்களை சிஎம்டிஏ அதிகாரிகள் விரட்டியடித்தனர். பயணிகளிடம் வழிப்பறி, செல்போன் திருட்டு, வளாகம் முழுவதும் அசுத்தம் செய்வது போன்ற பிரச்சினைகள் காரணமாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இரவு பகல் பார்க்காமல் பயணிகள் கூட்டம் நிரம்பியிருக்கும். குறிப்பாக வெளியூரில் இருந்து வரும் பயணிகள் சென்னை அல்லது புறநகருக்கு செல்ல சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொள்வது வழக்கம்.
ஆனால் இதைப் பயன்படுத்தி கூட்டமாக தஞ்சமடையும் மர்ம நபர்கள் வழிப்பறி, செல்போன் திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன. இதனால் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியது. 24 மணி நேரமும் தங்கியிருப்பவர்கள் வளாகத்தை அசுத்தமாக்கினர். அழுக்கு துணி மூட்டைகள் போட்டு இடையூறு செய்தனர். இயற்கை உபாதைகளை அங்கேயே கழிப்பதால் சுகாதாரம் பாதிக்கப்பட்டது.
இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். தஞ்சமடைந்தவர்களை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதை ஏற்று சிஎம்டிஏ அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். பயணிகள் அல்லாத வெளிநபர்களை வெளியேற்றினர். அசுத்தமான இடங்களில் தண்ணீர் ஊற்றி, பிளீச்சிங் பவுடர் தூவி சுத்தம் செய்தனர்.
தேனி நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆண்டிபட்டி மற்றும் வருசநாடு பகுதிகளில் புதிய திட்டப் பணிகளைத் திறந்து வைத்த தேனி…
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சாலையில் விபத்தில் சிக்கிய காவலர் ஒருவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து நேற்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.…
தங்கம் விலை வீழ்ச்சியடைந்து விடுமோ என்ற பீதியில் இந்திய குடும்பங்கள் சுமார் 50 டன் தங்கத்தை விற்றுப் பணமாக்கியதாக செய்திகள்…
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்குப் பின், விஜய் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட சிறப்பு 'நீயா நானா' நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் பெரும் விவாதப்…
மும்பையில் பெய்து வரும் பலத்த பருவமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. இந்த கனமழையின் தாக்கத்தால் ஆங்காங்கே…
மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், முறையான சாலை வசதியும் ஆம்புலன்ஸ் சேவையும் இல்லாததால், பழங்குடியினப் பெண் ஒருவர் கட்டிலில்…