“நள்ளிரவில் 18 வயசு பையனோடு அந்த கோலம்” பார்க்கக்கூடாததை பார்த்த மாமியார்… ஆத்திரத்தில் உண்மையை உளறிய மருமகள்… பிரேதப் பரிசோதனையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

Spread the love

மதுராவின் ராயா (Raya) காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பன்கர்பூர் பசேலா (Bhankarpur Basela) கிராமத்தில் மார்ச் 3-ஆம் தேதி அன்று அன்வரி பேகம் என்ற முதியவர் உயிரிழந்தார். இவருடைய மகன் மற்றும் கணவர் வெளியூரில் வேலை பார்த்து வந்த நிலையில், வீட்டில் மருமகள் ஹீனா மற்றும் மாமியார் மட்டுமே இருந்துள்ளனர். மார்ச் 3-ஆம் தேதி அதிகாலை ஒரு மணியளவில், ஹீனாவின் கள்ளக்காதலன் ஆதில் வீட்டிற்கு வந்தபோது, அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததை அன்வரி பேகம் நேரில் கண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹீனாவும் ஆதிலும் சேர்ந்து, தலையணையால் அன்வரி பேகத்தின் முகத்தை அழுத்தி மூச்சுத்திணறச் செய்து அவரைக் கொலை செய்தனர்.

மாமியார் உயிரிழந்ததும், “அம்மிக்கு திடீரென சைலண்ட் ஹார்ட் அட்டாக் (Silent Attack) வந்துவிட்டது” என்று ஹீனா தனது கணவருக்கும் மாமனாருக்கும் போன் செய்து தகவல் கொடுத்து அவர்களை நம்பவைத்துள்ளார். குடும்பத்தினர் எவ்வித சந்தேகமும் இன்றி முதியவரின் உடலை அடக்கம் செய்துவிட்டனர். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு ஹீனாவின் நடவடிக்கைகளில் அவரது மாமனாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும், வீட்டில் ஒரு தகராறு ஏற்பட்டபோது, “உன் அம்மாவைக் கொன்றது போலவே உன்னையும் கொன்றுவிடுவேன்” என்று ஹீனா ஆத்திரத்தில் பேசியது உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.

இதையடுத்து முதியவரின் கணவர் அளித்த புகாரின் பேரில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி மார்ச் 10-ஆம் தேதி உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், முதியவர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததும், அவரது கழுத்து எலும்பு உடைந்திருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மருமகள் ஹீனா மற்றும் அவரது 19 வயது கள்ளக்காதலன் ஆதில் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Soundarya

Recent Posts

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

6 minutes ago

“நல்லா பண்றீங்க… தினமும் உங்கள பத்திதான் பேச்சு…!” – முதலமைச்சர் விஜய்க்கு போன் போட்டு … வாழ்த்திய ரங்கசாமி…!!

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் வேளையில், அவருக்குத் திரைத்துறையினரும் அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளைக் குவித்து…

17 minutes ago

தமிழகமே உஷார்…! வீட்டுக்குள்ளேயே இருக்கும் ஆபத்து… பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு…!

டெங்கு மற்றும் மலேரியாவை உருவாக்கும் கொசுக்கள் முக்கியமாக தேங்கி நிற்கும் தூய்மையான மற்றும் அசுத்தமான தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.…

31 minutes ago

அடுத்த 4 நாட்களுக்கு நோ டென்ஷன்..! வெளியூர் போறீங்களா..? அரசு கொடுத்த அதிரடி குட் நியூஸ்…!!

முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை சிறப்பு பேருந்துகள்…

54 minutes ago

“20 ரூபாய் சாப்பாடு 120 ரூபாயா…?!” – வாரணாசி ரயில் நிலையத்தில் எகிறிய மாணவர்… ஓடிவந்து ஓனர் பர்ஸை காலி செய்த போலீஸ்…! வீடியோ வைரல்…!!

வாரணாசி ரயில் நிலையத்திற்கு வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த ஒரு உணவுக்கடையில் சோலே பட்டூரே வாங்கியுள்ளார். அதன்…

1 மணத்தியாலம் ago

“எனக்கு கேக் எல்லாம் வெட்ட வேண்டாம்” வாயு கசிவு விபத்தினால் பிறந்தநாள் கேக்கை திருப்பி அனுப்பிய முதல்வர் விஜய்..!!

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள்,…

1 மணத்தியாலம் ago