வருகிற 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் அல்லது திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய்யின் அரசியல் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரைத் தேர்தல் களத்தில் எதிர்கொள்ள ஆளுங்கட்சியான திமுக இப்போதே வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளது. விஜய் எந்தத் தொகுதியில் நின்றாலும், அவருக்கு எதிராக ஒரு பலமான வேட்பாளரை நிறுத்தி கடும் சவாலை அளிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
விஜய் ஒருவேளை சென்னையின் பெரம்பூர் தொகுதியைத் தேர்வு செய்தால், அவருக்கு எதிராகப் பலம் வாய்ந்த அமைச்சரான பி.கே. சேகர் பாபுவை களமிறக்க திமுக திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சென்னையில் செல்வாக்கு மிக்க தலைவராகவும், களப்பணியில் கைதேர்ந்தவராகவும் அறியப்படும் சேகர் பாபு, விஜய்க்கு இணையான வாக்குகளைப் பெற்றுத் தரக்கூடியவர் என அக்கட்சித் தலைமை நம்புகிறது. குறிப்பாக வடசென்னைப் பகுதிகளில் சேகர் பாபுவுக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு விஜய்க்குப் பெரும் நெருக்கடியைத் தரும் எனக் கருதப்படுகிறது.
அதேபோல், விஜய் திருச்சி கிழக்குத் தொகுதியைக் குறிவைத்தால் அங்கும் திமுக தரப்பிலிருந்து ஒரு வலுவான உள்ளூர் அமைச்சரோ அல்லது செல்வாக்கு மிக்க நிர்வாகியோ நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. விஜய்யின் முதல் தேர்தல் களம் என்பதால், அவரைத் தோல்வியடையச் செய்வதன் மூலம் தவெக-வின் எழுச்சியைக் கட்டுப்படுத்த திமுக தீவிரம் காட்டி வருகிறது. இதனால், விஜய் போட்டியிடும் தொகுதி எதுவாக இருந்தாலும், அங்கு மற்ற தொகுதிகளை விடக் கூடுதல் கவனம் செலுத்தி ஒரு ‘ஸ்
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள்,…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புர்னியா பகுதியில் உள்ள ஒரு பல்லடுக்குக் கட்டிடத்தில் திங்கட்கிழமை…
குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பேராசையினால் பெற்ற தாயையே தாக்கி, லட்சக்கணக்கில் பணம் மற்றும்…
நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான…
சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு உணர்ச்சிகரமான வீடியோ, மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் ஆழமான உணர்வுகள் உண்டு என்பதை…
தெலங்கானா மாநிலம் ஜக்டியாலில் நீட் தேர்விற்குச் சற்று தாமதமாக வந்த தனது மகளைத் தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி, பெற்ற…