கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 38 வயது பெண் ஒருவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அந்த பெண்ணின் கணவர் 8 வருடங்களுக்கு முன்பு அவரைப் பிரிந்து சென்றார். இதனால் அந்த பெண் தன்னுடைய மகளோடு தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர் மகள் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய பள்ளியில் பாலியல் வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அதில் மாணவி பங்கேற்று அதிர்ச்சிகரமான தகவலை கூறி இருக்கிறார். அதாவது கடந்த ஆறு வருடங்களாக தன்னுடைய தாய் தன்னையே பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்து வருவதாக கூறியுள்ளார்.
இதைக் கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். பின்னர் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி கதறி அழுதார். இதனையடுத்து அந்த மாணவியின் தாயை பிடித்து விசாரித்ததில் திருமணத்திற்கு பிறகு கணவரோடு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தான் தன்னுடைய மகளுக்கு கற்றுக் கொடுத்ததாக பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த தாயை கைது செய்துள்ளார்கள். தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகளோடு தன்னுடைய தாய் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…