பாம்பை பார்த்தால் படையும் நடுங்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப பாம்பு என்றால் பயப்படாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதுவும் வீடு அல்லது தோட்டம் போன்ற பாதுகாப்பான இடங்களில் பாம்பு நடமாட்டம் இருந்தால் அது நிச்சயம் வீட்டில் இருப்பவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும். தோட்டத்தில் இருக்கக்கூடிய மரங்கள், செடிகள், குப்பைகள் ஆகியவை பாம்புகளுக்கு பாதுகாப்பான தங்கும் இடமாக உருவாக்கலாம். இதனை சுலபமான முறையில் விரட்ட முடியாது. இந்த நான்கு பொருட்களைக் கொண்ட எளிதில் விரட்டி விடலாம்.
நாப்தலீன் என்பது பாம்புகளை விரட்டும் சிறந்த மற்றும் எளிய வீட்டு வைத்தியமாகும். இதன் வாசனையை பாம்புகள் வெறுக்கும். சாதாரண பாம்புகளாக இருந்தாலும் அல்லது விஷ பாம்புகளாக இருந்தாலும் உங்கள் வீட்டைச் சுற்றி வரும் இடங்களில் இதனை பயன்படுத்துவது சிறந்தது. முதலில் நான்கு அல்லது ஐந்து நாப்தலின் பந்துகளை நன்கு பொடியாக அரைத்துக் கொண்டு அதில் ஒன்று முதல் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து ஒரு கரைசலாக தயாரிக்க வேண்டும். தயாரான இந்த கரைசலை தோட்டத்தில் உள்ள மரங்கள், செடிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தெளிக்கலாம். உங்கள் வீட்டு ஜன்னல் மற்றும் கதவு பகுதியில் தெளித்தால் பாம்புகள் நெருங்காது.
அம்மோனியாவை இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி எடுத்து அதில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து ஒரு கலவையாக தயார் செய்ய வேண்டும். அந்தக் கலவையை ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி உங்கள் வீட்டு சுற்றுப்புறத்தில் உள்ள மரங்கள், செடிகள் மற்றும் பூக்கள் மீது தெளித்தால் பாம்பு வராது.
தோட்டத்தில் பாம்புகள் வருவதை தடுக்க கிராம்பு மற்றும் லவங்கப்பட்ட எண்ணெய் சிறந்த இயற்கை தீர்வாக இருக்கும். இதில் இருக்கும் சக்தி வாய்ந்த வாசனை பாம்புகளை கடுமையாக தொந்தரவு செய்யும் என்பதால் அவை அந்த இடத்திற்கு வரவே விரும்பாது.
அடுத்து சல்பர் பவுடரை தண்ணீரில் கலந்து ஒரு கரைசலாக தயாரித்து அதனை தோட்டத்தில் உள்ள செடிகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தெளிக்க வேண்டும். இந்த கரைசலில் வாசனை பாம்புகளை தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…