உங்க வீட்டுக்கு அடிக்கடி பாம்பு வருதா?.. இந்த 4 பொருள் இருந்தா போதும் உங்க வீட்டு பக்கம் எதுவும் எட்டி பாக்காது..!

By Nanthini on ஆடி 1, 2025

Spread the love

பாம்பை பார்த்தால் படையும் நடுங்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப பாம்பு என்றால் பயப்படாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதுவும் வீடு அல்லது தோட்டம் போன்ற பாதுகாப்பான இடங்களில் பாம்பு நடமாட்டம் இருந்தால் அது நிச்சயம் வீட்டில் இருப்பவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும். தோட்டத்தில் இருக்கக்கூடிய மரங்கள், செடிகள், குப்பைகள் ஆகியவை பாம்புகளுக்கு பாதுகாப்பான தங்கும் இடமாக உருவாக்கலாம். இதனை சுலபமான முறையில் விரட்ட முடியாது. இந்த நான்கு பொருட்களைக் கொண்ட எளிதில் விரட்டி விடலாம்.

நாப்தலீன் என்பது பாம்புகளை விரட்டும் சிறந்த மற்றும் எளிய வீட்டு வைத்தியமாகும். இதன் வாசனையை பாம்புகள் வெறுக்கும். சாதாரண பாம்புகளாக இருந்தாலும் அல்லது விஷ பாம்புகளாக இருந்தாலும் உங்கள் வீட்டைச் சுற்றி வரும் இடங்களில் இதனை பயன்படுத்துவது சிறந்தது. முதலில் நான்கு அல்லது ஐந்து நாப்தலின் பந்துகளை நன்கு பொடியாக அரைத்துக் கொண்டு அதில் ஒன்று முதல் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து ஒரு கரைசலாக தயாரிக்க வேண்டும். தயாரான இந்த கரைசலை தோட்டத்தில் உள்ள மரங்கள், செடிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தெளிக்கலாம். உங்கள் வீட்டு ஜன்னல் மற்றும் கதவு பகுதியில் தெளித்தால் பாம்புகள் நெருங்காது.

   

அம்மோனியாவை இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி எடுத்து அதில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து ஒரு கலவையாக தயார் செய்ய வேண்டும். அந்தக் கலவையை ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி உங்கள் வீட்டு சுற்றுப்புறத்தில் உள்ள மரங்கள், செடிகள் மற்றும் பூக்கள் மீது தெளித்தால் பாம்பு வராது.

   

தோட்டத்தில் பாம்புகள் வருவதை தடுக்க கிராம்பு மற்றும் லவங்கப்பட்ட எண்ணெய் சிறந்த இயற்கை தீர்வாக இருக்கும். இதில் இருக்கும் சக்தி வாய்ந்த வாசனை பாம்புகளை கடுமையாக தொந்தரவு செய்யும் என்பதால் அவை அந்த இடத்திற்கு வரவே விரும்பாது.

 

அடுத்து சல்பர் பவுடரை தண்ணீரில் கலந்து ஒரு கரைசலாக தயாரித்து அதனை தோட்டத்தில் உள்ள செடிகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தெளிக்க வேண்டும். இந்த கரைசலில் வாசனை பாம்புகளை தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.