கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 38 வயது பெண் ஒருவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அந்த பெண்ணின் கணவர் 8 வருடங்களுக்கு முன்பு அவரைப் பிரிந்து சென்றார். இதனால் அந்த பெண் தன்னுடைய மகளோடு தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர் மகள் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அவருடைய பள்ளியில் பாலியல் வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அதில் மாணவி பங்கேற்று அதிர்ச்சிகரமான தகவலை கூறி இருக்கிறார். அதாவது கடந்த ஆறு வருடங்களாக தன்னுடைய தாய் தன்னையே பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்து வருவதாக கூறியுள்ளார்.
இதைக் கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். பின்னர் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி கதறி அழுதார். இதனையடுத்து அந்த மாணவியின் தாயை பிடித்து விசாரித்ததில் திருமணத்திற்கு பிறகு கணவரோடு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தான் தன்னுடைய மகளுக்கு கற்றுக் கொடுத்ததாக பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த தாயை கைது செய்துள்ளார்கள். தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகளோடு தன்னுடைய தாய் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
