உத்திரபிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவர் ஏப்ரல் 1ஆம் தேதியன்று பள்ளிக்குச் சென்றுள்ளார். மதியம் 1 மணிக்கு வீடு திரும்பும்போது, கிராமத்தைச் சேர்ந்த வீரேஷ் அவளைப் பிடித்து கோதுமை வயலுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கில் காவல்துறையின் ஆரம்பத்திலிருந்தே ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வந்துள்ளார்கள். மேலும் வழக்கின் அறிக்கை பதிவு செய்யப்படாதபோது, சிறுமியின் தந்தை நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்குப் பதிவு செய்திருந்தார்.
இந்த வழக்கில், போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாததால், போலீசார் இந்த வலக்கை முடித்து வைத்தார்கள். இதனையடுத்து சிறுமியின் தந்தை எதிர்ப்பு மனுவை தாக்கல் செய்தார். சம்பவ இடத்தில் இருந்த நேரில் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்யவில்லை என்று அதில் எழுதப்பட்டிருந்தது.
இருப்பினும் இந்த தீவிரமான வழக்கின் விசாரணை குறைபாடுடையதாக சொல்லி முடித்து வைக்கப்பட்டுள்ளது. அதாவது குற்றம் சாட்டப்பட்டவருக்கு சமோசா கடை உள்ளது. அங்கு சென்ற போலீசார் 6 சமோசாக்களை மட்டுமே எடுத்துக்கொண்டு, அடிப்படையற்ற உண்மைகளின் அடிப்படையில் வழக்கை விசாரித்த்துவிட்டு இந்த வலக்கை முடித்து வைத்துள்ளார்கள்.
