வடக்கு கோவாவில் உள்ள அப்போரா பகுதியில் அமைந்துள்ள கடற்கரையோர நைட் கிளப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் அதிக வந்து செல்லும் மாநிலங்களில் ஒன்றான கோவா அரபிக் கடலோரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று நள்ளிரவு வடக்கு கோவாவின் அப்போரா பகுதியில் அமைந்துள்ள இரவு நேர விடுதி ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில் மொத்த மூன்று பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விடுதியில் தீ கட்டுப்படுத்தப்பட்டது. உயிரிழந்தவர்களின் மூன்று முதல் நான்கு பேர் சுற்றுலாப் பயணிகள் என்றும் மற்றவர்கள் விடுதியில் சமையலறையில் பணியில் இருந்தவர்கள் என்றும் கோவா முதல்வர் தெரிவித்துள்ளார். 20 பேர் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த விபத்து குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"ஊழல், லஞ்சம், சிபாரிசு ஆகியவை தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் இருக்காது, இருக்கவும் விடமாட்டோம்" என தவெக தலைவர் விஜய்…
தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அண்மையில் புதிதாக இணைந்த முக்கிய முகங்களுக்கு கட்சிப் பதவிகளை வழங்குவது தொடர்பாக, கட்சியின் தலைவர்…
கடந்த 2019 முதல் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் அதிமுகவில், சமீபத்திய 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் யாரும்…
இந்தோனேசியாவின் மிகவும் பழைமைவாத மாகாணமான அச்சேவில், காரில் அமர்ந்து முத்தம் கொடுத்துக்கொண்டதை டிக்டாக்கில் நேரலையாக ஒளிபரப்பிய 22 வயது வாலிபருக்கும்,…
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முன்னாள் திமுக அமைச்சர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டு வரும் அடுத்தடுத்த…
தமிழகத்தில் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்குவதற்காக மாண்புமிகு…