கடந்த 2019 முதல் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் அதிமுகவில், சமீபத்திய 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் யாரும் எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவளிப்பது தொடர்பாக ஏற்பட்ட உட்கட்சி முரண்பாடுகளால், அதிமுகவின் முக்கிய முகங்களும் மூத்த நிர்வாகிகளும் அடுத்தடுத்து கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்து வருகின்றனர். தவெகவிற்கு ஆதரவு தராமல் திமுகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சியமைக்க எடப்பாடி பழனிசாமி முயன்றதாகக் குற்றம்சாட்டி, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6 தற்போதைய எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வைகைச்செல்வன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.வளர்மதி உள்ளிட்ட முக்கியப் புள்ளிகளும், சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
இப்படியான இக்கட்டான மற்றும் சோதனையான சூழ்நிலையில், கட்சியின் சரிவைத் தடுத்து மீண்டும் கட்டமைப்பை வலுப்படுத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக களம் இறங்கியுள்ளார். சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கிய மாவட்ட வாரிய ஆலோசனைக்கூட்டம், வருகிற 8-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது. நேற்று செங்கல்பட்டு, வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி, இன்று (சனிக்கிழமை) காலையில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளுடனும், மாலையில் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடனும் முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளார். இக்கூட்டங்களில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரும் பங்கேற்று வருகின்றனர்.
முன்னதாக நடைபெற்ற கூட்டங்களில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தவெகவின் அசுர வளர்ச்சியைத் தாங்கள் அரசியல் ரீதியாகக் கணிக்கத் தவறிவிட்டதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். இருப்பினும், தற்போதைய சரிவிலிருந்து மீள்வதற்காக மாவட்டந்தோறும் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை உடனடியாகச் சீரமைக்கவும், புதிய தலைமுறை இளைஞர்களைக் கவரும் வகையில் அதிரடியான செயல்திட்டங்களைச் செயல்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். கட்சி நிர்வாகிகள் விலகலால் தொண்டர்கள் சோர்வடையக் கூடாது என்றும், அடிமட்டத் தொண்டர்களை அரவணைத்து கட்சியை மீண்டும் புத்துயிர் பெறச் செய்வதே இந்த ஆலோசனைக் கூட்டங்களின் முதன்மை நோக்கம் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் தான் சோர்வடையவில்லை என்றும், சோர்வு நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளும் தலைமைப் பொறுப்பு தனக்கு…
இண்டிகோ நிறுவனம் குறைந்த லக்கேஜுடன் பயணிப்பவர்களுக்காக 'இண்டிகோ லைட்' என்ற புதிய எகானமி கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம் அருகே, ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளுடன் சுமார்…
மெக்சிகோ நாட்டின் ஜாலிஸ்கோ மாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மொரேனோ நகராட்சி உட்பட பல பகுதிகளில், மோட்டார் சைக்கிள் திருடர்கள்…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, போதைப்பொருட்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.…
தாய்லாந்தின் முக்தஹான் மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 35 புத்த துறவிகள், தலைநகர் பாங்காக்கில் இருந்து வடகிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவில்…