“ஊழல், லஞ்சம், சிபாரிசு ஆகியவை தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் இருக்காது, இருக்கவும் விடமாட்டோம்” என தவெக தலைவர் விஜய் கட்சியின் கொள்கை மாநாட்டிலும் மக்கள் பேரவைகளிலும் ஆவேசமாக முழங்கியிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில் அறங்காவலர் பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டாலும், தவெக தரப்பில் தங்களுக்கு வேண்டியவர்களின் பெயர்களைக் கொண்ட ஒரு ரகசிய சிபாரிசுப் பட்டியலே தனியாகத் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தனியார் நாளிதழ் ஒன்று ஷாக்கிங் ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் வெளிப்படைத்தன்மையைத் தாண்டி, திரைமறைவில் முறைகேடான சிபாரிசுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, தூய்மையான அரசியல் தருவதாகக் கூறி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த புதிய அரசுக்கு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. ‘சொன்னதைச் செய்வாரா… தன் கட்சி நிர்வாகிகளின் இந்த முறைகேட்டுப் பட்டியலைக் கிழித்தெறிந்து கடும் நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்?’ என்ற பலத்த எதிர்பார்ப்பும் கேள்வியும் தற்போது மக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் எழுந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, ஜபல்பூர்…
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களால் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பை…
வாட்ஸ்அப்பில் ‘ஏர்டெல் க்ரோத்’ என்ற பெயரில் உலா வரும் லிங்க்குகளை பொதுமக்கள் யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர்…
அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணியான உஷா வான்ஸ் குழந்தைகளுக்காக நடத்தும் 'ஸ்டோரிடைம் வித் தி செகண்ட் லேடி' என்ற சிறார் பாட்காஸ்ட்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்வியால் தான் சோர்வடையவில்லை என்றும், சோர்வு நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ளும் தலைமைப் பொறுப்பு தனக்கு…
இண்டிகோ நிறுவனம் குறைந்த லக்கேஜுடன் பயணிப்பவர்களுக்காக 'இண்டிகோ லைட்' என்ற புதிய எகானமி கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…