தவெக ஆட்சியில் முதல் ஊழல்… ஷாக்கிங் ரிப்போர்ட்… மக்கள் அதிர்ச்சி…!

By Visaka on ஆடி 4, 2026

Spread the love

“ஊழல், லஞ்சம், சிபாரிசு ஆகியவை தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் இருக்காது, இருக்கவும் விடமாட்டோம்” என தவெக தலைவர் விஜய் கட்சியின் கொள்கை மாநாட்டிலும் மக்கள் பேரவைகளிலும் ஆவேசமாக முழங்கியிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ஒரு செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில் அறங்காவலர் பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டாலும், தவெக தரப்பில் தங்களுக்கு வேண்டியவர்களின் பெயர்களைக் கொண்ட ஒரு ரகசிய சிபாரிசுப் பட்டியலே தனியாகத் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தனியார் நாளிதழ் ஒன்று ஷாக்கிங் ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆன்லைன் வெளிப்படைத்தன்மையைத் தாண்டி, திரைமறைவில் முறைகேடான சிபாரிசுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, தூய்மையான அரசியல் தருவதாகக் கூறி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த புதிய அரசுக்கு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. ‘சொன்னதைச் செய்வாரா… தன் கட்சி நிர்வாகிகளின் இந்த முறைகேட்டுப் பட்டியலைக் கிழித்தெறிந்து கடும் நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்?’ என்ற பலத்த எதிர்பார்ப்பும் கேள்வியும் தற்போது மக்கள் மத்தியிலும் அரசியல் வட்டாரத்திலும் எழுந்துள்ளது.