Categories: சினிமா

தி.மு.க தலைவர்கள் முன் கைவிலங்கோடு மாட்டிக்கொண்ட MGR… ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த பரபரப்பு சம்பவம்…

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் போற்றப்பட்ட நடிகர் MGR. இவருக்கு ரசிகர்கள் அல்ல பக்தர்கள் ஏராளமானவர்கள் உண்டு என்றே சொல்லலாம். நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்து தமிழ்நாட்டையே சிறப்பாக ஆண்டவர் எம்.ஜி.ஆர் அவர்கள். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆர் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே திராவிட கட்சியில் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அப்படி எம்ஜிஆர் அரசியலையும் நடிப்பையும் ஒரே நேரத்தில் சிறப்பாக கவனம் செலுத்தி பணியாற்றி வந்தார். அதனால் ஏதாவது முக்கியமான விஷயம் என்றால் திராவிட கட்சியினர் எம்ஜிஆர் சூட்டிங் நடக்கும் இடத்திற்கே வந்து அவரை சந்தித்து விட்டு செல்வர். அப்படி ஒரு படத்தின் ஷூட்டிங்கின் போது நடந்த ஒரு பரபரப்பான சம்பவத்தை பற்றி இனி காண்போம்.

1963ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடித்து வெளியான திரைப்படம் ‘ஆனந்த ஜோதி’ இப்படத்தை விஎன் ரெட்டி மற்றும் ஏ எஸ் ஏ ராமசாமி இணைந்து இயக்கி உள்ளனர். இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதியவர் ஜாவர் சீதாராமன், பி எஸ் வீரப்பா இப்படத்தை தயாரித்துள்ளார்.

படத்தில் நாயகியாக தேவிகா, எம் ஆர் ராதா, எஸ் ஏ அசோகன், எஸ் வி ராமதாஸ், சிறுவனாக கமலஹாசன், பிஎஸ் வீரப்பா, மனோரமா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கண்ணதாசன் பாடல் வரிகளுடன் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

இப்படத்தில் முக்கியமான காட்சியின் சூட்டிங் நடைபெற்ற நேரம் அது. பி எஸ் வீரப்பா இந்த படத்தில் இன்ஸ்பெக்டராக வருவார். அந்த காட்சியில் எம்ஜிஆரையும் தேவிகாவையும் பி எஸ் வீரப்பா கைது செய்து கொண்டு செல்வது போல் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எம்ஜிஆர், தேவிகாவின் கைகளை இணைத்து கை விலங்கு போட்டு வைத்திருப்பர். அந்த கைவிலங்கின் சாவியை படக்குழுவில் இருந்த ஒரு இளைஞன் வைத்திருந்தான். முதல் காட்சி படமாக்கப்பட்ட பின் சாவியை வைத்து கைவிலங்கை திறந்து விட்டனர்.

பின்னர் இரண்டாவதாக அடுத்த காட்சி படமாக்கப்பட்டபோது மீண்டும் கை விலங்கு எம்ஜிஆஆருக்கும் தேவிகாவிற்கும் பூட்டப்பட்டது. படக்காட்சியும் எடுத்து முடித்தாகி விட்டது. ஆனால் கைவிலங்கை கழட்டுவதற்கு சாவி வைத்திருந்த பையனை மட்டும் ஷூட்டிங் ஸ்பாட்டில் காணவில்லை. அவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. செய்வதறியாது தேவிகாவும் எம்.ஜி.ஆரும் கைவிலங்கோடு நாற்காலியில் அமர்ந்திருந்தனர். அந்நேரத்தில் திமுக கட்சியில் இருந்த தலைவர்கள் அவசர வேலையாக எம் ஜி ஆர் ஐ காண சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்திருந்தனர்.

உடனே ஷூட்டிங் ஸ்பாட் பரபரப்பாகி போனது. செய்வதறியாத எம்ஜிஆர் பூட்டப்பட்டிருந்த கை விலங்கோடு சேர்த்து திமுக தலைவர்களை சந்தித்து அனுப்பி வைத்தார். வெகு நேரம் கழித்து சாவி வைத்திருந்த இளைஞன் வந்ததும் அந்த தர்ம சங்கடமான நிலைமை குறித்து பேசி எம்ஜிஆர் கோபப்படாமல் சிரித்துள்ளார் அந்த இளைஞனை அனுப்பியுள்ளார்.

admin

Recent Posts

“நடைபாதையில் தூங்கிய பிஞ்சு உயிர்.. கொடூரமாக சீரழித்து வீசி சென்ற டாக்சி டிரைவர்”… 100 சிசிடிவி கேமராக்கள்.. 4 மணி நேர வேட்டை… டெல்லியை உலுக்கிய கொடூர சம்பவம்..!

டெல்லியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும்…

7 minutes ago

உதயநிதிக்கு முதல்வர் விஜய் கொடுத்த ஸ்பேஸ் முடிந்தது… பொறுமையா இருந்தது இதுக்குதான்…. அம்பலப்படுத்திய நடிகர் ஷாம்…!

தமிழக சட்டசபையில் கடந்த சில வாரங்களாக "முதலமைச்சர் விஜய் ஏன் அமைதியாக இருக்கிறார்?", "அவருக்குப் பேசத் தெரியவில்லையா?" என்று எழுந்த…

18 minutes ago

திமுகவிலிருந்து விலகுகிறாரா செந்தில் பாலாஜி?… அதிமுக, பாஜகவுக்கு கொடுத்த ‘ஷாக்’ ட்ரீட்மென்ட்.. சட்டசபையில் நடந்த அதிரடி திருப்பம்…!

அண்மைக் காலமாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தங்கள் வசம் இழுக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், பாஜகவும் தீவிரமாக…

27 minutes ago

“நாங்க மட்டும் இல்லன்னா அன்னைக்கு பதவியேற்பே நடந்திருக்காது”.. விஜய்க்கு கம்யூனிஸ்ட் கொடுத்த அதிரடி ஷாக்… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!

தமிழக அரசியல் களம் தற்போது 'தவெக'ஆட்சி நீடிப்பது யாரால்?' என்ற காரசாரமான விவாதத்தால் சூடேறியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்…

35 minutes ago

“எமர்ஜென்சிக்கே அஞ்சாத நாங்க இதுக்கா பயப்படப் போறோம்?”… தவெக-வை வறுத்தெடுத்த அமைச்சர் சேகர்பாபு….!

தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உருட்டல் மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக ஒருபோதும் பயப்படாது…

40 minutes ago

“திமுக, அதிமுகவுக்கு வன்னி அரசு கொடுத்த மரண மாஸ் பதிலடி”…. நேரில் அழைத்து விஜய் செய்த காரியம்…. அதிர்ந்துபோன அரசியல் களம்….!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், பெரும்பான்மைக்குக் கூட்டணி தேவைப்பட்ட சூழலில் விசிக,…

47 minutes ago