மேற்குவங்க மாநிலம் துர்கா போரில் உள்ள ஷோபாபூர் அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இது கொல்கத்தாவில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் ஒடிசா மாநிலம் ஜலேஸ் வரை சேர்ந்த மாணவி அங்கு இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றார். இப்படியான நிலையில் நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் கல்லூரி வளாகத்தை விட்டு ஆண் நண்பருடன் உணவருந்துவதற்காக மாணவி சென்றுள்ளார். அப்போது ஒரு கும்பல் மாணவியின் நண்பரை கடுமையாக தாக்கியது.
அவரை அங்கிருந்து துரத்திவிட்டு மாணவியை தர தரவென இழுத்துச் சென்று மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒதுக்குப்புறமாக பகுதியில் வைத்து அந்த கும்பல் மாணவியை கூட்டு, பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அப்போது வளாகத்தில் காவலர்கள் யாரும் இல்லை என கூறப்படுகிறது. அந்த மாணவி தற்போது படுகாயங்களுடன் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கொல்கத்தாவில் கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் தற்போது இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…