சென்னை மாமன்றம் கலைப்பு..? மேயர் பிரியா டிஸ்மிஸ்..? 157 கவுன்சிலர்கள் சொத்துக் கணக்கு தராததால் பதவிகளுக்கு ஆபத்து..!!

Spread the love

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உட்பட 157 கவுன்சிலர்கள் சட்டப்படி தங்களது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விதிகளின்படி, மக்கள் பிரதிநிதியாகப் பதவியேற்ற 90 நாட்களுக்குள்ளும், அதன்பின்னர் ஆண்டுதோறும் மார்ச் 31-ஆம் தேதிக்குள்ளும் தங்களது சொத்துக் கணக்கைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும். ஆனால், பெரும்பாலான கவுன்சிலர்கள் இந்த விதிகளை முறையாகப் பின்பற்றவில்லை என்பது தற்போதைய RTI தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விதிமீறல் காரணமாக, சொத்து விவரங்களைத் தாக்கல் செய்யத் தவறிய மக்கள் பிரதிநிதிகள் தங்களது தகுதியை இழந்து பதவி நீக்கம் செய்யப்பட சட்டத்தில் இடமுள்ளது. சென்னை மாநகராட்சியின் மொத்தமுள்ள 200 வார்டுகளில், மேயர் உட்பட 157 பேர் இந்த தகுதி நீக்கப் பட்டியலின் கீழ் வர வாய்ப்புள்ளதால், மாநகராட்சி நிர்வாகம் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக, சென்னை மாமன்றம் ஒட்டுமொத்தமாகக் கலைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

Soundarya

Recent Posts

பிறந்து 56 நாட்களே ஆன குழந்தையை தூங்க வைக்க பேன் போட்ட தந்தை… அடுத்த நொடியே துடிதுடித்து பலி… பெரும் சோகம்..!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, பிறந்து 56 நாட்களே ஆன தனது குழந்தையைத் தூங்க வைப்பதற்காக மின்விசிறியைப் போட்ட தந்தை…

5 minutes ago

“சட்டமன்றத்திற்குள் நுழைந்த ‘குட்டி TVK’.. பெண் MLA-க்கள் செய்த செயலால் நெகிழ்ந்துபோன கோட்டை”..!!

தமிழ்நாட்டின் 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர், ஜூன் 18, 2026 அன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களின் உரையுடன்…

5 minutes ago

FLASH: அரசு மருத்துவமனை நுழைவுவாயில் கான்கிரீட் இடிந்து விபத்தில் தாய், மகள் படுகாயம்… தமிழகத்தில் அதிர்ச்சி..!!

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் நுழைவுவாயில் கான்கிரீட் பகுதி திடீரென இடிந்து விழுந்த விபத்தில், தாய்…

15 minutes ago

“நான் முதல்வன் பெயர் மாற்றம்… மக்களுக்கு அந்த ஒரு பெயர்தான் ஞாபகம் வரும்… புதிய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்…!!”

தி.மு.க. ஆட்சியில் 2022-ஆம் ஆண்டு மாணவர்களின் கல்வி, திறன் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்காக 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டது. அரசுப்…

15 minutes ago

நான் காதலித்த முதல் நபர் யார் தெரியுமா..? அதை சொன்னா தமிழ்நாடே அதிரும்… புது குண்டை தூக்கிப்போட்ட நடிகை வனிதா… கண்டுபிடித்த நெட்டிசன்கள்..!!

நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது முதல் காதல் குறித்துப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய…

19 minutes ago

பகீர்.. சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் பெண் சடலம்… திருமண மண்டபமாக மாறும் தொழிற்சாலைக் கிணற்றில் பயங்கரம்… பதறவைக்கும் பின்னணி…!

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகே மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ராசிபுரம் பகுதியில், தற்போது செயல்படாமல் இருக்கும் ஒரு…

25 minutes ago