Categories: சினிமா

“எங்க ஏரியா உள்ள வராதா”.. ஒவ்வொரு வாரமும் TRP-யில் டாப் 5 இடங்களை விட்டு கொடுத்தகாத.. சன் டிவி சீரியல்களின் லிஸ்ட்.!

Spread the love

பொதுவாக சன் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் தனி வரவேற்பு உண்டு. ஏனென்றால் அந்த காலத்தில் இருந்து தற்போது வரை மக்களுக்கு எந்த மாதிரியான கதைக்களத்தை கொடுத்தால் மக்கள் விரும்பி பார்ப்பார்கள் என்றதற்கு ஏற்றது போல சன் டிவியில் உள்ள சீரியல்கள் அனைத்தும் வந்து கொண்டிருக்கிறது. அதனால் சன் டிவியில் சுமார் 19 சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் அடுத்தடுத்த சீரியல்களும் வரிசை கட்டி காத்திருக்கின்றன. அதன்படி காலையில் மட்டும் 11 சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவரும் அனைத்து சீரியல்களையும் விரும்பி பார்க்கின்றனர்.

இருந்தாலும் டிஆர்பி ரேட்டிங் பொருத்தவரையில் மாலை நேரத்தில் ஒளிபரப்பாக கூடிய சீரியல்கள் தான் அதிக புள்ளிகள் பெற்று டாப் இடத்தை பிடிக்கின்றது.  என்னதான் சன் டிவி சீரியல்களுக்கு போட்டியாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்கள் டப் கொடுத்தாலும் ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடங்களை பிடிப்பது சன் டிவி சீரியல்கள் ஆக தான் உள்ளன. அப்படி டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடங்களை தொடர்ந்து பிடிக்கும் சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சிங்க பெண்ணே:

ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியல் தான் சிங்க பெண்ணே. அதனைப் போலவே டிஆர்பி ரேட்ங்கில் எப்படியாவது தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து வருகிறது. குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்திலிருந்து சென்னை வந்து கார்மெண்ட்ஸ் யில் வேலை செய்து கொண்டிருக்கிறார் ஆனந்தி. இவர் அன்பு என்பவரை காதலிக்க ஆனந்தியை ஓனர் காதலிக்கிறார். ஒரு வழியாக ஆனந்தி மற்றும் அன்பு காதல் தெரிய வர தற்போது ஆனந்தி கர்ப்பமாக இருக்கின்றார். இனி அவர் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டுதான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

மூன்று முடிச்சு:

ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 லிஸ்டில் இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தை பிடிக்கக் கூடிய சீரியல் தான் மூன்று முடிச்சு. இந்த சீரியலில் சுவாதி நாயகியாகவும், இவருக்கு ஜோடியாக நியாஸ் ஹீரோவாகவும் நடிக்கிறார்கள். கடந்த ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சீரியலில் நந்தினி மற்றும் சூர்யா திருமணத்தால் சூர்யா அம்மா பயங்கர கோபத்தில் இருக்கின்றார். இனி அவர் என்ன செய்வார் என்ற கதைக்களத்தை நோக்கி தான் சீரியல் நகர்கிறது.

கயல்:

கடந்த சில வருடங்களாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள சீரியல் தான் கயல். தனது குடும்பத்திற்காக எல்லா சந்தோஷத்தையும் இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதை தான் இந்த கயல் சீரியல். அடுத்தடுத்து கையெழுத்து பல தொந்தரவுகள் வந்த நிலையில் தற்போது கயலின் திருமண வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை கொண்டு இந்த தொடரை ஒளிபரப்பாகி வருகிறார்கள்.

மருமகள்:

புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் என்றாலும் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து டாப் 5 லிஸ்டில் இடம் பிடித்து வருகிறது. இந்த சீரியல் கடந்த ஆண்டு இறுதியில் சன் டிவியில் தொடங்கப்பட்ட நிலையில் ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சீரியலில் பிரபு மற்றும் ஆதிரை திருமணம் முடிந்தது. அதன் பிறகு அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் தான் விறுவிறுப்பாக செல்கிறது.

அன்னம்:

சன் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சீரியல் தான் அன்னம். அப்பா அம்மாவை இழந்த ஒரு பெண் தனது தாய்மாமன் உறவால் வாழ்ந்து வருகிறார். அன்னத்திற்கு அவரது தாய் மாமன் தனது மூத்த மகன் சரவணனை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அந்த ஏற்பாடுகளை செய்கிறார். திருமண எபிசோடும் பரபரப்பாக செல்ல கடைசியில் அன்னத்திற்கு கார்த்திக் என்பவர் உடன் திருமணம் நடந்து முடிகிறது. இனி அவர் வாழ்க்கையில் சந்திக்க போகும் இன்னல்கள் குறித்த கதை தான் இந்த சீரியல். இந்த சீரியலும் டிஆர்பி யில் டாப் 5 இடத்தில் இடம் பிடித்து வருகிறது.

Nanthini

Recent Posts

எல்பிஜி சிலிண்டர் பயனர்களுக்கு அதிர்ச்சி… ஜூன் 30-க்குப் பிறகு கனெக்ஷன் கட்…? மத்திய அரசின் நியூ அப்டேட்…!!

இந்தியாவில் சமையல் எரிவாயு அத்தியாவசிய தேவையாக உள்ள நிலையில், ஒரே வீட்டில் பைப்லைன் மூலமாக வரும் PNG கேஸ் மற்றும்…

52 seconds ago

காலையிலேயே பரபரப்பு… இனி தவெக-வும் இல்ல, அதிமுக-வும் இல்ல…. சி.விஜயபாஸ்கரின் ‘ஸ்கெட்ச்’… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப்…

3 minutes ago

“அந்த ஒரு ரகசிய அறை.. பகலில் வீடு.. இரவில் விபச்சார விடுதி”…. 27 வயது இளைஞனுக்கு நேர்ந்த கொடூரம்…. திருச்சூரில் நடுங்க வைக்கும் உண்மை….!

கேரள மாநிலம் திருச்சூரில் செயல்பட்டு வந்த சட்டவிரோத விபச்சார விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த…

6 minutes ago

“சுயமரியாதையுடன் விடைபெறுகிறோம்…!” – போட்டி முடிந்ததும் உடை மாற்றும் அறையில்… ஈரான் அணி செய்த அந்த நெகிழ்ச்சி காரியம்…!!

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஈரான் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான லீக் போட்டி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

9 minutes ago

விவாகரத்து கேஸை மறந்த கணவன்… பெட்ரூமில் காத்திருந்த அதிர்ச்சி… வெளிநாட்டிலிருந்து வந்த மனைவி செய்த காரியம்….!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவருக்கும், கனகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணமாகி, 4½…

10 minutes ago

“நள்ளிரவில் நடந்த கொடூரம்… 12 வயது மகனின் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த அவலம்”… திருட வந்த கும்பல் செய்த நெஞ்சை பதறவைக்கும் காரியம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள பட்நகர் பகுதியில், கடந்த ஜூன் 18 ஆம் தேதி நள்ளிரவில் அரங்கேறியுள்ள…

15 minutes ago