தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என்று பன்முக திறமை கொண்ட கலைஞராக வலம் வந்தவர் தான் எம்ஜிஆர். இவர் அரசியலிலும் கலக்கினார். முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தான் எம்ஜிஆர் இருந்தார். கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட இந்த கட்சியில் இருந்து கொண்டு மூகாம்பிகை கோவிலுக்கு சென்றது, மருதமலை கோவிலுக்கு சென்றது என்று எம்ஜிஆர் கட்சியில் சில சலசலப்புகளை சந்தித்து இருந்தாலும் படப்பிடிப்பில் சக நடிகையின் மூலமாக ஒரு சம்பவத்தை எதிர்கொண்டார். நாடக நடிகரான எம்ஜிஆர் 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலமாக தான் துணை நடிகராக சினிமாவில் நுழைந்தார்.
அதன்பிறகு தொடர்ந்து பல படங்களில் துணை நடிகர்கள் மற்றும் இரண்டாவது நாயகன் என அழைத்து வந்த எம்ஜிஆர் 10 ஆண்டு இடைவேளைக்கு பிறகு 1947 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்தில் இவருடன் நடிக்க முடியாது என்ற சில நடிகைகள் மறுத்த சம்பவமும் பல நடந்து உள்ளது. பல தடைகளை கடந்து தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட எம்ஜிஆர் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் தனக்கு என்று தனிமுத்திரையை பதித்தார். இவர் முதல் படமான நாடோடி மன்னன் என்ற படத்தை இயக்கி தயாரித்த நிலையில் பெரிய வெற்றியை பெற்று தந்தது. அடுத்தடுத்து பல வெற்றிகளை கொடுத்த எம்ஜிஆர் தன்னுடைய படங்கள் தொடர்பான முடிவை தானே எடுக்கும் நிலைக்கு உயர்ந்தார்.
எம்ஜிஆருக்கு மிகவும் தீவிரமான ரசிகர்கள் இருந்தனர். அவரை அனைவரும் வாழும் கடவுளாகவே பார்த்தனர். அதனால் எம்ஜிஆர் மூன்று முறை தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக இருந்தார். தன்னால் முடிந்த வரை பல ஏழை மக்களுக்கும் உதவி செய்தார். ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர காரணமாக இருந்தவர் எம்ஜிஆர் என்று தான் சொல்ல வேண்டும். எம்ஜிஆருக்கு ஏதாவது என்றால் ரசிகர்கள் பொங்கி விடுவார்கள். அப்படிதான் 60 காலகட்டத்தில் குடும்பப் பாங்கான படங்களை இயக்கி பிரபலமாக இருந்த கே எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஜெமினி கணேசன் நடித்த வெளியான பணமா பாசமா என்ற திரைப்படம் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய தியேட்டர் ஆன மதுரை தங்கம் தியேட்டரில் 100 நாட்கள் ஓடி வசூலை அள்ளியது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய கே எஸ் கோபாலகிருஷ்ணன், இந்த படம் வசூல் சக்கரவர்த்திகளின் படங்களின் வசூலை முறியடித்து விட்டது என எம் ஜி ஆர் ஐ மறைமுகமாக தாக்கி பேசினார். பேசிவிட்டு வெளியே வந்து பார்த்தபோது அவரின் கார் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த கே எஸ் கோபாலகிருஷ்ணன் இது பற்றி தங்கம் தியேட்டர் அதிபரிடம் முறையிட அவரோ மதுரையில் எம்ஜிஆர் ரசிகர்கள் தான் அதிகம். அவரின் பட போஸ்டரை பார்த்தாலே கையில் இருக்கும் பீடியை மறைத்துக் கொள்வார்கள். அந்த அளவிற்கு மரியாதை கொடுக்கும் ரசிகர்கள் எம்ஜிஆரை நீங்கள் தாக்கி பேசினால் சும்மா விடுவாங்களா, பத்திரமா வீட்டுக்கு போங்க என்று சொல்லி அனுப்பி வைத்தாராம்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…