கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குப்பி தாலுகாவைச் சேர்ந்த லட்சுமி தேவம்மா (50) என்ற பெண், கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், ஆழ்துளைக் கிணறு தோண்டும் தொழிலாளியான நாகராஜ் (55) என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதனிடையே, லட்சுமி தேவம்மாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 29 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த நாகராஜ் அவரை ஆழ்துளைக் கிணறு தோண்டும் தோட்டம் ஒன்றிற்கு அழைத்துள்ளார். அங்கு இருவரும் தனிமையில் இருந்த நிலையில், அந்த வாலிபர் குறித்து ஏற்பட்ட தகராறில், நாகராஜ் உருட்டுக்கட்டையால் லட்சுமி தேவம்மாவை அடித்துக் கொலை செய்துள்ளார்.
பின்னர் கொலையை மறைப்பதற்காக அவரது உடலைத் தோட்டத்தின் மறைவான பகுதிக்கு இழுத்துச் சென்று தீ வைத்து எரித்துள்ளார். மறுநாள் காலையில் உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்த தோட்ட உரிமையாளர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லட்சுமி தேவம்மாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிஸார், தலைமறைவாக இருந்த நாகராஜைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…