சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு வேலை செய்து வந்த இவர், கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி வேலைக்குச் சென்ற இடத்தில் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரது கணவர் ஜீவானந்தம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதனிடையே, அரிசிப்பாளையம் பகுதியில் உள்ள இரு வீடுகளின் மாடியில் இருந்த சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டிகளில் 3 மூட்டைகளில் பெண்ணின் உடல் பாகங்கள் சுமார் 7 துண்டுகளாக வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன. உடலின் மீது பச்சை குத்தப்பட்டிருந்த பெயர்களை வைத்து, அது மாயமான தங்கமணியின் உடல் என்பதைப் பள்ளப்பட்டி காவல்துறையினர் உறுதி செய்தனர்.
காவல்துறையினரின் தீவிர விசாரணையில், தங்கமணியுடன் வேலை பார்த்த நந்தினி (28) மற்றும் அவரது நண்பர்களான மாலிக் பாஷா (30), சிவராமன் (28) ஆகியோர் இந்தச் கொடூரத்தைச் செய்தது தெரியவந்தது. நந்தினியும் மாலிக் பாஷாவும் பழகியதில் ஏற்பட்ட கடனை அடைக்க, தங்கமணி அணிந்திருந்த 3 சவரன் நகையைக் கேட்டுக் தகராறு செய்துள்ளனர். அவர் தர மறுத்ததால் அடித்துக் கொன்று, உடலை 7 துண்டுகளாக வெட்டி மூட்டைகளில் கட்டித் தண்ணீர் தொட்டிகளில் வீசியுள்ளனர். நகைகளை விற்று பணத்தைப் பகிர்ந்து கொண்ட இந்த 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…
நதியாட் ரயில் நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-பிகானீர் விரைவு ரயிலில் ஏறும் போது வழுக்கி விழுந்த ஒரு பயணியை ஆர்.பி.எஃப்…