#image_title
இந்திய சினிமா கண்ட மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் மோகன் லால். இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் 3 முறை தேசிய விருது வென்றுள்ளார். எந்த பாத்திரம் கொடுத்தாலும் அந்த பாத்திரமாகவே மாறி நடித்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
ஆனால் கடந்த சில வாரங்களாக அவர் மேல் சில சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள் மற்றும் பிரபலங்களுக்குத் தண்டனைப் பெற்றுத்தராமல் நடிகர் சங்கத் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தது அவர் மேலும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
இதுபற்றி பேசியுள்ள மோகன்லால் “நான் எந்த பவர் குரூப்பிலும் இல்லை. நான் மலையாள திரையுலகில் 47 ஆண்டுகளாக இருந்து வருகிறேன். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. ஹேமா கமிட்டி அறிக்கையை வரவேற்கிறேன். மலையாள நடிகர் சங்கமான அம்மா என்பது வர்த்தக யூனியன் கிடையாது. இது ஒரு குடும்பம். சங்கம் பற்றி அவதூறாக பேசாதீர்கள். மற்ற திரையுலகை காட்டிலும் மலையாள திரையுலகம் சிறப்பாகவே இருக்கிறது.” எனக் கூறியுள்ளார்.
ஆனால் மோகன்லாலும் இதுபோல பல லீலைகளில் ஈடுபட்டவர்தான் என்று அரசல்புரசலாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதற்கு உதாரணமாக ஒரு பொது நிகழ்ச்சியில் ஒரு நடிகை நடனமாடும் போது மோகன்லால் ஆபாசமான செய்கைகள் செய்தது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில்தான் மோகன் லால் பற்றி மம்மூட்டி சொன்னதாக நடிகர் சீனிவாசன் பேசியுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகியுள்ளது. அதில் “அப்போது மோகன் லால் ஹீரோவாக நடிக்கவில்லை. வில்லனாகதான் நடித்து வந்தார். அப்போது மம்மூட்டி என்னிடம் ‘இவனை நாம் சாதாரணமாக நினைக்கக் கூடாது. அவன் சீக்கிரமே ஹீரோவாகி விடுவான். அது மட்டுமிலை அவன்தான் எனக்கு போட்டியாக வரப்போகிறான். கேரள சினிமாவின் முகத்தையே மாற்றப் போகிறான்” எனக் கூறியுள்ளார்.
இந்தோனேசியாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில், தொடர் திருட்டுகளால் கடுப்பாகிப் போயிருந்த பொதுமக்கள் நள்ளிரவில் கடையொன்றுக்குள் புகுந்த நான்கு கொள்ளையர்களைக்…
தமிழக முதலமைச்சரின் "தாயுமானவர் திட்டத்தின்" கீழ், 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, கூட்டணி கட்சிகளுடன் பட்ஜெட் கூட்டத்தொடர், நிர்வாக…
குஜராத் மாநிலம் ஜுனாகத் பகுதியில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், தம்பதியர் இருவர் தங்களது மோட்டார்…
தமிழக அரசியல் களத்தில் கூட்டணிகள் வேகமாக மாறிவரும் நிலையில், வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்காமல்…
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக, காங்கிரஸ் இடையேயான கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான…