“அட கொடுமையே… மனைவியுடன் கள்ளத்தொடர்பு… எச்சரித்தும் கேட்காத நபர்… மாந்தோப்பில் கொடூரமாக வெட்டிக்கொலை… தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்…!”

Spread the love

தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரி கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (45) என்பவர் பெட்டிக்கடை வைத்து நடத்துவதுடன், வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கும் தொழிலையும் செய்து வந்தார். இந்நிலையில், இலஞ்சியில் இருந்து குற்றாலம் செல்லும் சாலையில் உள்ள ஒரு மாந்தோப்பில் சுதாகர் கத்தியால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார். தகவலறிந்து வந்த குற்றாலம் காவல்துறையினரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமாரும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், மேல இலஞ்சி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (35) மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து இந்த கொலையைச் செய்தது தெரியவந்தது. மாரியப்பனின் மனைவிக்கும் சுதாகருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அதை கைவிடுமாறு மாரியப்பன் பலமுறை எச்சரித்தும் சுதாகர் கேட்காததால், ஆத்திரமடைந்த மாரியப்பன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சுதாகரை மாந்தோப்பிற்கு வரவழைத்து கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

கொலைக்கு காரணமான மாரியப்பன் மற்றும் அவரது நண்பர்களைக் குற்றாலம் காவல் துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட சுதாகரும், கொலை செய்த மாரியப்பனும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தென்காசி மற்றும் குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Swetha

Recent Posts

“செயற்கை நுண்ணறிவு முதல் தாய்மாமன் சீர் வரை….” தமிழக பட்ஜெட் 2026-ன் டாப் 10 மாஸ் திட்டங்கள்…!!

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-2027 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் பொதுமக்களை கவரும் வகையிலான பல்வேறு முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.…

8 minutes ago

“3 மணி நேரம் ரூமில் அடைத்து வைத்து…” பங்குச்சந்தை ஆலோசகர் பி.ஆர். சுந்தருக்கு சிக்கல்…! பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த புகாரால் பரபரப்பு….!

சென்னையைச் சேர்ந்த பிரபல பங்குச்சந்தை ஆலோசகரும் தொழிலதிபருமான பி.ஆர். சுந்தர் மீது பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் காவல் நிலையத்தில்…

22 minutes ago

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…! ரூ.838 கோடியில் புதிய காப்பீட்டு திட்டம்… பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்பு…!!

தமிழக அரசு ஊழியர்களின் மருத்துவ நலனைப் பாதுகாக்கும் பொருட்டு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூ.838 கோடி நிதி ஒதுக்கீடு…

38 minutes ago

BREAKING: மகளிருக்கு இலவசமாக 5 ஆடுகள்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…

4 மணத்தியாலங்கள் ago

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்…! ரூ.33 கோடியில் வெளியான மாஸ் திட்டம்… நடமாடும் மருத்துவ மையங்கள் குறித்த நிதியமைச்சரின் அறிவிப்பு…!!

மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: “கலைஞர் கனவு இல்லம் இனி வெற்றி வீடு…” பட்ஜெட்டில் வெளியான அதிரடி பெயர் மாற்றம்…!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…

5 மணத்தியாலங்கள் ago