தமிழக அரசு ஊழியர்களின் மருத்துவ நலனைப் பாதுகாக்கும் பொருட்டு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூ.838 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரசுப் பணியாளர்களுக்கான அடிப்படை மருத்துவக் காப்பீட்டு வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், சில குறிப்பிட்ட தீவிர நோய்களுக்கான காப்பீட்டு நிதி உதவி அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரையிலும் உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
இத்துடன் அரிய வகை நோய்களுக்குப் சிகிச்சை பெற ரூ.15 லட்சம் வரை நிதி உதவி வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 2,992 மருத்துவச் சிகிச்சைகளை உள்ளடக்கிய இத்திட்டத்தின் கீழ் 1,535 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சென்று சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம். அரசு ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் மருத்துவச் செலவுச் சுமையைப் பெருமளவில் குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த அறிவிப்பு ஊழியர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதி ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசின் வருமானம், செலவினங்கள் மற்றும் கடன்…
தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்த 2026-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது…
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-2027 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் பொதுமக்களை கவரும் வகையிலான பல்வேறு முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.…
சென்னையைச் சேர்ந்த பிரபல பங்குச்சந்தை ஆலோசகரும் தொழிலதிபருமான பி.ஆர். சுந்தர் மீது பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் காவல் நிலையத்தில்…
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…