அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…! ரூ.838 கோடியில் புதிய காப்பீட்டு திட்டம்… பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்பு…!!

Spread the love

தமிழக அரசு ஊழியர்களின் மருத்துவ நலனைப் பாதுகாக்கும் பொருட்டு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூ.838 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அரசுப் பணியாளர்களுக்கான அடிப்படை மருத்துவக் காப்பீட்டு வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், சில குறிப்பிட்ட தீவிர நோய்களுக்கான காப்பீட்டு நிதி உதவி அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரையிலும் உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

இத்துடன் அரிய வகை நோய்களுக்குப் சிகிச்சை பெற ரூ.15 லட்சம் வரை நிதி உதவி வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 2,992 மருத்துவச் சிகிச்சைகளை உள்ளடக்கிய இத்திட்டத்தின் கீழ் 1,535 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சென்று சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம். அரசு ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் மருத்துவச் செலவுச் சுமையைப் பெருமளவில் குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த அறிவிப்பு ஊழியர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

கடன் ரூ.10.98 லட்சம் கோடி…! “வருவாய் துண்டு விழுந்தது எவ்வளவு…? பட்ஜெட்டில் இடம்பெற்ற பற்றாக்குறை மற்றும் செலவின பட்டியல்…!!

தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27 நிதி ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசின் வருமானம், செலவினங்கள் மற்றும் கடன்…

7 minutes ago

சொன்ன வாக்குறுதிகள் எல்லாம் எங்கே….? “பட்ஜெட் பிளாஸ்ட் இல்ல, வெறும் வேஸ்ட்…” தவெக அரசை வெளுத்து வாங்கிய மு.க. ஸ்டாலின்…!!

தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்த 2026-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்து முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது…

19 minutes ago

“செயற்கை நுண்ணறிவு முதல் தாய்மாமன் சீர் வரை….” தமிழக பட்ஜெட் 2026-ன் டாப் 10 மாஸ் திட்டங்கள்…!!

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-2027 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் பொதுமக்களை கவரும் வகையிலான பல்வேறு முக்கியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.…

28 minutes ago

“3 மணி நேரம் ரூமில் அடைத்து வைத்து…” பங்குச்சந்தை ஆலோசகர் பி.ஆர். சுந்தருக்கு சிக்கல்…! பெண் செய்தி வாசிப்பாளர் அளித்த புகாரால் பரபரப்பு….!

சென்னையைச் சேர்ந்த பிரபல பங்குச்சந்தை ஆலோசகரும் தொழிலதிபருமான பி.ஆர். சுந்தர் மீது பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் காவல் நிலையத்தில்…

42 minutes ago

BREAKING: மகளிருக்கு இலவசமாக 5 ஆடுகள்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…

5 மணத்தியாலங்கள் ago

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்…! ரூ.33 கோடியில் வெளியான மாஸ் திட்டம்… நடமாடும் மருத்துவ மையங்கள் குறித்த நிதியமைச்சரின் அறிவிப்பு…!!

மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…

5 மணத்தியாலங்கள் ago